Mar 1, 2011

லிபியாவை நோக்கி நகரும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்!!

அமெரிக்கா பிப்,2: தரை மற்றும் கடல் வழியாக லிபியாவைச் சுற்றிலும் அமெரிக்கப் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது. லிபியாவின் உள்நாட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது அதன் நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்குடன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவே அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர். செங்கடல் அருகே அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பல்கள் நகர்த்தப்பட்டுள்ளதுடன், இத்தாலியின் சிசிலியா தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கமாண்டோக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கென விசேட முகாம்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையே லிபியாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிப்பது குறித்தும் அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது. அதன் மூலம் வான் வழியாக கடாபி வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்று கருதப்படுகின்றது. எங்க போகி சொல்ல இந்த மனிதாபிமானத்தை லேட்ச்ச கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனது இந்த விமானம்தாங்கி கப்பல்களும், ராணுவமும், இந்த ஐ.நா. சபையும்.

No comments: