Showing posts with label வாசகர் படைப்பு. Show all posts
Showing posts with label வாசகர் படைப்பு. Show all posts

May 26, 2011

பேரினவாதம் நீதிக்கு அப்பாற்பட்டதா!!

May 26, சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை.

எப்படி துடித்திருக்கும் தமிழீழ மக்களின் இதயங்கள். கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன. வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின் சத்தங்கள்.

தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள்.

தாயும், தந்தையும் சென்ற இடம் தெரியாமல் யாரிடம் சென்று அபயம் தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் சின்னஞ்சிறார்களின் காட்சி.

துப்பாக்கிய நீட்டிய சிங்கள துன் மார்க்கர்களின் கையில் கிட்டிய அபலை பெண்கள். கனரக ஆயுதங்களால் 50 ஆயிரத்திருக்கும் மேற்பட்ட மக்களை சிலதினங்களுக்குள் கொன்று குவித்த சிங்கள இரத்தக் காட்டேறிகள். நீதிக்கு தலைவனே! இம்மக்கள் விசயத்தில் நீதி செலுத்து.

அதுபோல் குஜராத்தில் கொல்லப்பட்டனரே, வீடுகளுக்குள் பூட்டி காஸ் சிலிண்டர்களை திறந்து எரித்து கரிக்கட்டையாக்கினரே அந்த உயிர்கள் எப்படித் துடித்திருக்கும்.

தனக்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத வயிற்றிலிருந்த சிசுவை வயிறு கிழித்து எடுத்து ஈட்டியால் குத்தி நெருப்பில் வாட்டினானே. எப்படி செய்ய முடிந்தது?

நடந்த இந்த நிகழ்வை, மிருகங்கள் கூட அதிசயிக்கும் இப்படிப்பட்ட இவர்களை வழி நடத்துபவர் யார்? இவர்களுடன் பேசிச்சிரித்து, விருந்துண்டு, விழாக்களில் கலந்துகொண்டு, கூடி, குழவி.... எப்படி முடிகிறது இவர்களால்?

தன்னால் செய்விக்கப்பட்ட அந்த ஈவிரக்கமற்ற செயலை எப்படி இரசித்து, சிரித்து அசை போட்டு பார்க்க முடிகிறது இவர்களால்? இவர்களின் இந்த ஈனச்செயல்களை என்னவென்று சொல்வது.

ஒரிசாவிலே பால் மனம் மாறா பாலகர்களிருவரை தந்தையுடன் சேர்த்து வாகனத்தில் எரித்து கொன்றனரே! வாகனத்தினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் வெப்பம் உணர்ந்து சிறு பட்சிகள்போல் பட படத்து வெளியேறத் துடித்த பொழுது,

அந்த வாகனத்தினுள்ளே தனக்கும் தன் அன்புக்குழந்தைகளுக்கும் நேரும் பயங்கரத்தை உணர்ந்து உடல் வேதனையும், தன் குழந்தைகளுக்கு நேரும் மரணத்தின் வலியை போக்க வெளியே பாயும் அந்த தகப்பனையும்,

சிறு குழந்தைகளையும் கோடாரிகளைக் கொண்டு தாக்கி வெளியேற விடாமல் உள்ளேயே சுட்டுப்போசுக்கிய அந்த பயங்கரவாதிகளைவிடவா வேறு பயங்கரவாதிகள் இந்த உலகத்தில் இருக்க முடியும்?

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், அரசுகளும், ஆள்பவர்களும் செய்யும் வன் கொடுமைக்கும், கொலைக்கும், சித்ரவதைக்கும் மனிதமுள்ள மக்கள்தான் முடிவு கட்டவேண்டும்.

பேரினவாதம் செய்யும் கொடுமைகளை இந்திய செய்தித்துறையும், பத்திரிகைத்துறையும் கண்டு கொள்ளக்கூடாதென்று சத்தியம் செய்து கொண்டது போல் தெரிகிறது. சுய உணர்வுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இந்த அநியாயத்திற்கு பொறுப்பாவான்.

செய்தி குழுமங்களே! நீங்கள் பன்மையாய் இருக்கும் பட்சத்தில், உங்களின் தனி நபர் பொறுப்பு குறைந்து விடுமென்று வாலாதிருக்கவேண்டாம். அநியாயத்தை கண்டும், காணாதிருக்கும் நீங்கள் அநியாயத்திற்கு துணை போனவர்கள் ஆவீர்.

உங்களின் அநியாயத்திற்கு துணை போகும் பண்புக்கு பகரமாக உங்களின் குடும்ப வாழ்க்கையில் கூட இறைவன் நிம்மதி இல்லாமலாக்கலாம். அல்லது மற்றவருக்கு நடந்த அதே போன்ற அநியாயங்கள் சோதனையாக உங்கள் குடும்ப நபருக்கே விளைவிக்கப்படலாம்.

அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஓன்று திரட்ட வேண்டும். யாரும் யாரையும் அடக்கியாளக்கூடாது. தீரமிக்க, மனித நேயமிக்க நல்ல அரசுகள் வரவேண்டும். மனிதம் நிலைத்திருக்க வேண்டும். அநியாயம் செய்தது அரசே ஆனாலும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். - MOHAMED THAMEEM

"யாழினியின் கருத்து பதிவாகிறது". என்ற பதிவுக்கு வாசகர் மிஸ்டர் தாமீம் எழுதிய கமன்ட் அது ஒரு பதிவு போல் நிறைய செய்திகளை தாங்கி நின்றதால், அவர்களது கருத்தும் ஒரு பதிவாக வாசகர்களுக்கு சமர்பிக்கப்படுகிறது. - அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

Apr 27, 2011

எகிப்த் & லிபியா புரட்சி!! ஒரு ஒப்பாய்வு!!

உலகின் நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் நாடு எகிப்த். இவர்கள் நாகரிகத்தில் அடைந்த உட்சம் அதனால் அவர்கள் வாழ்வில் உல்லாசம்.

இந்த உல்லாசத்திலே லயித்து அரசியல் பற்றி ஆராய கூட மனமில்லாமல் 35 வருடங்களுக்கு மேல் கழித்து விட்டார்கள்.

தங்கள் வாழும் வாழ்வில் சில குறைபாடுகள் பொருளாதார ரீதியில் குறுக்கிட நேர்ந்த போது விழித்து பார்த்ததன் விளைவுதான் மக்கள் புரட்சி.

வேலை வேண்டும், நல்ல கல்வி வேண்டும், நல்ல நவீனயுக யுக்திகளை கையாள வேண்டும் என சிந்தித்ததின் விளைவு மக்கள் ஆட்சி மாற்றத்தை நாடினர்.

கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை முறையிலும் அழகிய முறையிலும் ஒரு போராட்டத்தை, புரட்சியை நடத்தி காட்டினர்.

ஊழல் செய்வதில், சுகபோகம் அனுபவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த எகிப்த்து அதிபர் செய்வதறியாது திகைத்தார்.

அடக்குமுறைகளை கையாண்டு எதுவும் பலிக்காமல் பதவி விலகியது எல்லாமே நாகரிகமான முறையில் நடந்தேறியது.

ஒரு பெரும் போராட்டத்தை நடத்திய மக்கள்! போராட்டம் முடிந்து வீடு திரும்பும் முன் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தது வியப்பின் உட்சம்.

சில இடங்களில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து! எதுவுமே நடக்காதது போன்று கலைந்து சென்ற செயல்! உலகில் புரட்சி செய்யவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு! ஒரு முன்மாதிரி.


லிபியா நாட்டின் புரட்சி.................

லிபிய மக்கள் கடாபியை ஒரு ஹீரோவாக, கடாபி எது செய்தாலும் ஆகோ!! ஓஹோ என்று போற்றி! அவரை தலையில் வைத்து கூத்தாடினார்கள்.

எளிமையான தலைவன், யாருக்கும் பயப்படாத தலைவன் என்று தம்பட்டம் அடித்ததன் விளைவு கடாபியால் அந்த ஆட்சியை துறக்க முடியவில்லை.

21 நூற்றாண்டை கடந்து வந்த மக்கள் நவீன விஞ்சான யுகத்தில் உலகில் நடக்கும் ஆட்சிகளை, மாற்றங்களை பார்கிறார்கள்.

அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கபடும் ஒரு ஆட்சியை விரும்புகிறார்கள். குடும்ப அரசியலுக்கு, ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று நினைகிறார்கள்.

ஆனால் அந்த மக்கள் கையாண்ட போராட்ட முறைதான் தவறாக அமைந்து விட்டது.
தலைவனின் மூர்க்கம் நன்கு அறிந்த மக்கள் ஆயுத போராட்டத்தில் குதித்ததின் விளைவு அழிவுகள் பலவற்றை லிபிய சந்தித்து வருகிறது.

என்று மக்கள் ஒரு ஆட்சியாளனை விரும்பவில்லையோ உடனே ஆட்சியை விட்டு இறங்கிவிடு என்று சீன அறிவாளி பைதீகூ சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது.

தாங்கள் ஆளும் நாடே சுடுகாடானாலும் அதை அலட்சியம் செய்யாமல் தங்கள் ஆட்சி கட்டிலை தக்கவைத்து கொள்ள நினைப்பவர்கள் தான் லிபிய ஆட்சியாளர்கள்.

இது லிபியாவில் மட்டும்தான் என்று இல்லை உலகம் முழுவதும் பலநாடுகளில் இதே நிலைதான்.

இதில் நம் ஜனநாயக கோமாளிகள் நடத்தும் தெருக்கூத்து ரொம்பவும் வேடிக்கையானது. இவர்கள் ஆட்சி கட்டிலுக்காக நாகரிகம் இல்லாமல் மிருகங்கள் போல் அடித்து கொள்வதும், கோமாளித்தனமான கொள்கைகள் பேசித்திறிவதும் விநோதமானது, வேடிக்கையானது.

----------- ராஜ யோகி -----------

Feb 26, 2011

ஆயுத போராட்டத்தை நோக்கி தள்ளப்படும் இந்திய முஸ்லிம்கள்!!

மும்பை, பிப்.26- கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இவரை சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மற்றும் இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்ட சுனில் ஜோஷி என்பவரை சுட்டு கொன்ற வழக்கில் மீண்டும் சிபிஐ வழக்கு பதிவு செய்து தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளது.

யார்? இந்த சுனில் ஜோஷி!! ஏன்? இவரை ஹிந்துத்துவா இயக்கத்தை சேர்ந்த பெண்சாமியார் சாத்வி பிரக்யா சிங் சுட்டு கொல்ல வேண்டும்! இதுதான் நம் ஒவ்வொருவரிடமும் எழும் கேள்வி. இதுதான் பாசிச ஹிந்துதுவாவின் மற்றொரு கோரமுகம்.

இந்த சுனில் ஜோஷி என்பவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். இவரை கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டம் தீட்டியது. அதன்படி அஜ்மீர் தர்கா, சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், மலோகேன், ஹைதராபாத் மக்கா மசூதி உள்ளிட்ட பத்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். நடாத்தியது.

இந்த குண்டுவெடிப்புகளில் சுனில் ஜோஷி மட்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நேரடி தொடர்புடையவர். மற்ற நபர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டதில் அதிகமானோர் முஸ்லிம்களே! இருந்தும் இந்த குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் நடத்தியதாக குற்றம் சாட்டி இந்தியாவின் பாசிச காவல்துறையால் முஸ்லிம்கள் பெருவாரியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்கள்.

இப்படி தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு என்ன? லாபம்! என்று உங்களுக்கு இயல்பான ஒரு சந்தேகம் வரலாம். இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு பலவிதமான லாபங்கள் உண்டு.

ஒன்று இதன் மூலம் முஸ்லிம்களை கொன்று குவிப்பது. அடுத்து இந்த குண்டு வெடிப்புகளின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களை குற்ற பரம்பரை ஆக்கி மனரீதியாக சோர்வுற செய்வது. மற்றும் இந்த வழக்கின் மூலம் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கைது செய்து சிறையில் தள்ளுவது.

இதை வைத்து இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தும் அநீதங்களை பார்த்தீர்களா? என்று கூறி தங்களது ஹிந்துத்துவா வெறியை வளர்ப்பதன் மூலம் தங்களது இயக்கத்தை வளர்ப்பது. சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடிப்பது இதுதான் இவர்களது முக்கிய குறிக்கோள்.

எனவே இந்த குண்டு வெடிப்பின் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷியை எஸ் ஐ டி சிறப்பு புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து நெருங்கும் வேளையில் இவர் மர்மாமான முறையில் சுட்டு கொல்லபட்டார். இவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது துணை அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் மூலம் சுட்டு கொன்றது. தங்களது சொந்த இயக்கத்தை சேர்ந்தவர்களையும் இந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கொல்ல தயங்குவது இல்லை.

இதன் மூலம் இவர்கள் இவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை அறிய முடியும். இது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூரை, மத்திய பிரதேச மாஜி முதல்வர் உமாபாரதி சந்தித்து பேசினார் என்பதும் இவரைபற்றி உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இவரை சி.பி.ஐ. சுனில் ஜோஷி சுட்டு கொல்லபட்ட வழக்கில் மீண்டும் கைது செய்திருப்பது குறிப்பிட தக்கது. தங்களது ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் இவர்கள் எப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

இது போன்ற செய்திகளை ஹிந்துத்துவா ஆதரவு நாளேடுகளான தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற நாளேடுகளும், ஹிந்துத்துவா செய்தி நிறுவனங்களும் திட்டமிட்டு மூடி மறைகின்றன. இன்று பத்திரிகை துறை என்பது ஹிந்துதுவாவின் கைகளில் உள்ளது. இது போன்ற செய்திகளை முழுவதுமாக வெளியிடாமல் ஏதோ ஒரு மூலையில் ஒரு துண்டு செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்கின்றன.

இந்த தினமணி, தினமலர் பத்திரிக்கையை படியுங்கள் முழுவது உலக நாடுகளின் நடக்கும் பயங்கரவாதம் பற்றி எழுதுவார்கள். இங்கு சொந்த நாட்டில் தங்களது ஹிந்துத்துவா இயக்கங்கள் செய்யும் கலவரங்களை, குண்டு வெடிப்புகளை திட்டமிட்டு மறைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். ஏதாவது ஒரு வழக்கில் முஸ்லிம் பெயர் வந்தால் போதும் இவர்கள் அல்கொய்தா, லஸ்கர் தொய்பா, என்று கற்பனை குதிரையை ஓடவிட்டு கவர் ஸ்டோரி எழுதுவார்கள்

இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ள கூடிய ஒரு மோசமான பிரிவினைவாத சக்தியாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் திகழ்கிறது இதுவே உண்மை. சிங்கள பேரினவாத பயங்கரவாததிற்க்கும், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாததிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையில் என்ன? நடந்தது. சிங்கள பேரினவாதம் சிறுபான்மை இனமான தமிழர்களை அடக்கி ஒடுக்கியதன் விளைவுதான் இந்த ஈழ தமிழர் போராட்ட வரலாறு. இனி தனி தமிழ் ஈழநாடே தீர்வு என்ற நிலை உருவாகிவிட்டது.

 இதுபோல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கும், பயங்கரவாத தாக்குதலுக்கும் ஆளாக்கபட்டால், இந்த மதசார்பின்மை மீது உள்ள நம்பிக்கை தகர்க்கபட்டால் முஸ்லிம்களுக்கு ஆயுதம் தூக்குவதை தவிர வழியில்லை என்ற நிலைமை உருவாகும். இதை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும். இந்திய அரசும், நீதி மன்றங்களும், காவல்துறையும் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல், தடை செய்யாமால் அவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் ஒரு நிலை எடுப்பார்களே ஆனால்! இந்தியா ஒரு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி நகரும் என்பது காலத்தின் காட்டாயமகி விடும். இந்த அரசும், நீதிமன்றங்களும், காவல்துறையும், முஸ்லிம்களை ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளிவிடுவார்களோ என்பதே நடுநிலையாளர்களின் கவலை.

-மணிமாறன்-