Jan 5, 2012

எது வேண்டும்! அணுமின்நிலயமா? சேது சமுத்திர திட்டமா?

JAN 06: மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி நிற்கிறது சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணிகள். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் குரல் கொடுக்கும் போது அதை திறந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது மன்மோகன் அரசு. அதற்காக ராணுவத்தையும் இறக்க ரெடி என்கிறது. ஆனால் தமிழகத்துக்கு நலன் உண்டாக்கும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த மாற்று வழி குறித்து ஆலோசனை என்று சொல்லி அந்த திட்டத்தை மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டுள்ளது.

ஹிந்துத்துவா மதவாதம் பேசி தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கி வரும் வடஇந்திய இறக்குமதியான இந்து முன்னணியிடம் சரணடைந்த மத்திய அரசு கூடங்குளம் மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதென். கேட்டால் கூடங்குளத்தில் பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு விட்டதாக சொல்லும் மத்திய அரசு அதைக்காட்டிலும் அதிகமாக சேது சமுத்திர திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது என்பதை மறந்ததேன்.

ராமர் பாலம் கடலுக்கடியில் இருப்பதாக சொல்லி இந்து முன்னணி தலைவர் ராமகோபால ஐயர் தொடர்ந்து ஒரு பொய் பரப்புரை செய்து வருகிறார். தமிழ் நாட்டுக்கு வருமானம் கொடுக்கும் ஒரு பாதுக்காப்பான திட்டத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் இவரும் இவரது ஹிந்துத்துவா பரிவாரங்களும் நாசகார கூடங்குளம் அனுமின்னிலயத்தை உடனே திறக்கவேண்டும் என்று கோசம் போடுகின்றனர். தமிழர்களுக்கு நலம் உண்டாக்கும் திட்டங்களை புறக்கணிக்கும் இவர்கள் தமிழர்களுக்கு அழிவை உண்டாக்கும் திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதேன். கடைசியாக ராமகோபால ஐயரிடம் மண்டியிட்டது  மன்மோகன் சிங் அரசு.

15 comments:

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து தமிழ்மக்கள் மீதும் உண்டாவட்டுமாக ...அணுமின் நிலையத்தை முட அருமையான திட்டங்கள் இருக்கின்றது...கூடங்குளம் அணுமின்நிலையம் இருக்கும் இடத்தில் ராமர் அவதரித்து விட்டார் என்று கதை கட்டி விட்டுப்பாருங்கள் நாடாளுமன்றம் பாராளுமன்றம் அல்லல்படும் கூடங்குளம் அணுமின்நிலைய கதவுகள் தானாக முடும் ......பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ள மணல் திட்டுக்களை மனிதர்கள் பாலம் போன்ற வழித்தடமாக பாவித்து வந்ததை கடல் நீர் முள்கடித்ததினால் அதை மனிதர்களினால் பயன்படுத்த முடியவில்லை இருந்தபோதிலும் அதை ஆதம் பாலம் என்றுதான் விஞ்சானிகள் முதல் ஆதிகால மக்களும் சொல்லிவந்த ஒன்றை மக்கள் நலன்கருதி சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தால் தமிழகத்தில் ராமர் இருக்க வேண்டாமா அதுதான் ராமர் பாலம் என்றது ஒரு ௬ட்டம் மாற்று வழிதான் சிறந்தது என்றது ஒரு ௬ட்டம் என்னடா முட்டா பயல்களா தண்ணீருக்கு மேல் இருப்பதுதான் பாலம் என்றது ஒரு ௬ட்டம் கடைசியில நிறுத்திவையுங்கள் என்று நிறுத்தி விட்டார்கள் கொஞ்சமாவது தமிழகத்தின் வளர்ச்சியின் மிது அக்கறை இருந்த்திருந்தால் கடல் மார்க்கமாக வரும் கப்பல்களுக்கு இலகுவாக இருந்திருக்கும் தமிழகத்திற்கு நல்ல வருமானம் கிடைத்திருக்கும் இன்னும் பலதிட்டங்கள் நடந்திருக்கும் தமிழகத்தில் விலைவாசியை உயர்த்தாமல் அரசு நிர்வாகம் நடந்திருக்கும் இப்படி மக்கள் நலனில் கைவைக்கும் ராமபக்தனுக்கு சிந்திக்கும்தன்மைகள் குறைந்துகொண்டுபோகின்றது என்பதுதான் உண்மை மக்களுக்கு இடையுறாக இருக்கும் எந்த ஒன்றையும் ஒரு நல்ல அரசு அப்புறபடுத்தனும் ராமர் [ ஆதம் ]பாலம் உடைக்கப்படனும் அணுமின்நிலையத்தை உடனடியாக மாற்று வழிகளை காணனும் அதுதான் மக்களின் விருப்பத்திர்க்கான அரசாக இருக்குமா அல்லது ராமரசாக இருக்குமா சிந்திப்போம் ,,,,,,,,,,,,,,,புனிதப்போராளி

Anonymous said...

நல்லபதிவு.... பதிவுக்கு ஏற்றால்போல் சைடில் வைக்கப்படிருக்கும் வீடியோ கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்து பொய்யான பரப்புரை செய்யும் தினமலர் மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது. நன்றி தோழரே

சிவகார்த்திகேயன்- கூடுதாழை.

Anonymous said...

ஒப்பாய்வு நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.

RMY பாட்சா said...

ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிகாரிகலாக அவாலே
இருப்பதுதான் இதற்கு காரணம்.
இனிவரும் காலம்மாவது,நம்இனம், நம்மக்கள்,என்று நினைபதுநல்லது.
இவர்களின் பிரித்தாலும் சூல்ச்சியைகண்டு, நாம்புரிந்துகொள்ளவேண்டும்.
நமக்கு ஆரியனும் வேண்டாம்,திராவிடனும் வேண்டாம்,
இனி நம்மளைநாமே ஆழவழிசெய்வோம்.
அப்போதுதான் நமதுஉரிமை நமக்கு கிடைக்கும்
ஒன்றுபடுவோம் உரிமையை நிலைநாட்டுவோம்.
வாழ்க தமிழ்.

எழிலி said...

saariyana pathivu arasu aluvalakanglil nadakkum matha poojaikalaiyum parpana puthikalayum kalai eduthal ellame nallthave nadakkum

கபிலன் said...

"கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமும் குரல் கொடுக்கும் போது அதை திறந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது மன்மோகன் அரசு."

ஒட்டு மொத்த தமிழகமுமா.....எங்களை எல்லாம் எதுக்கு இதுல சேர்த்தீங்க....

"கேட்டால் கூடங்குளத்தில் பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு விட்டதாக சொல்லும் மத்திய அரசு"

இதை யார் எங்கு சொல்லி இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ? இது பொய்யான தகவல்னு என்னுடைய கருத்து.

மத்திய அரசு சொன்னதெல்லாம்...ஒரு நாலு பேரு வெளி நாட்டு காசுக்காக ஆசைப்பட்டு....அப்பாவி மக்களை ஏமாத்துறாங்க.....அப்படின்னு தான் மத்திய அரசு சொல்றாங்க.

"ராமர் பாலம் கடலுக்கடியில் இருப்பதாக சொல்லி இந்து முன்னணி தலைவர் ராமகோபால ஐயர் தொடர்ந்து ஒரு பொய் பரப்புரை செய்து வருகிறார்."

நாசாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பாலம் "Adam's Bridge" அல்லது ராமர் பாலம் அங்கு இருந்ததாக உறுதிப்படுத்துகிறது. இதிகாசங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. அப்படியே ஒரு சமய நம்பிக்கையாக இருக்கும் சின்னத்தை அழிப்பதென்றாலும் கூட அனைவருக்கும் பயன் தரக் கூடிய திட்டம் கொண்டு வந்தீங்கன்னா ஒத்துக்கலாம். டி ஆர் பாலுவின் கப்பல் கம்பெனிக்கும் மற்றும் அரசியல் வணிகர்களுக்கும் வேண்டுமானால் சேது சமுத்திர திட்டத்தினால் பயன் கிடைக்கும். மக்களுக்கு ஒரு பயணும் இல்லை !

ஆனந்த் said...

//இதை யார் எங்கு சொல்லி இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா ? இது பொய்யான தகவல்னு என்னுடைய கருத்து.

அணுசக்தி கழக தலைவர், நாராயணசாமி போன்றோர் நிறைய செலவு செய்துள்ளதாக சொல்லயுள்ளார்கள்.

Pandian R said...

பல்லுயிர் பெருக்கம் - பவளப்பாறைகள் உடைப்பு - மீன் பிடி தொழில் பாதகம் என்று பல்வேறு காரணங்களினால் இந்தத் திட்டத்தை எதிர்த்த சுற்றுச்சுழல் ஆர்வளர்கள் உண்டு. எது என்றாலும் சேறு வாறி இறைப்பதும், அபாயச் சங்கு ஊதுவதுதான் தமிழ் பதிவர் மற்றும் சஞ்சிககைளின் எண்ணமா?

Anonymous said...

இதுதான் அரைவேக்காட்டுத்தனம் என்பது. பவளப்பாறை,மீன்பிடி போன்ற பல பாதகத்தால் சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிற விஷயம் இது. அய்யருங்க எதிர்க்கறாங்கன்னு ஒருவிஷயம் சரின்னு ஆதரிக்க முடியாது. சார்/மேடம் கொஞ்சம் ஆராய்ச்சியும் பண்ணனும் கட்டுரை எழுதும் முன்பு. இதெல்லாம் தெரியாமல் கட்டுரை எழுதி ஒரு படத்த போட்டு...பிழைப்பு எப்படியோ ஓடுது...இல்லியா.? இதே லட்சணத்துலதான் இலங்கைப்பிரச்னையிலும் நீங்க சொல்றதுல எவ்வளவு உண்மை எவ்வளவு உளறல் என்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கு.

எழிலி said...

ANANAni unakku eppo ithula enna nastamnu kekkuren nallatha iruntha eduthuke vendioyathuthan athukku mudiyama oru pinnudam veru koyyala thirunthungada jathi veri pudicha sakadaikala

PUTHIYATHENRAL said...

//ஒட்டு மொத்த தமிழகமுமா.....எங்களை எல்லாம் எதுக்கு இதுல சேர்த்தீங்க.//

வணக்கம் கபிலன் அவர்களே... ஒட்டு மொத்த தமிழகமும் என்று சொன்னது பெரும்பான்மையான மக்கள் அதை எதிர்கிறார்கள் என்ற சொல்லாடலில் சொல்லப்பட்டது. மற்றபடி உங்களை அதில் சேர்க்கணும் என்கிற நோக்கம் இல்லை

PUTHIYATHENRAL said...

//நாசாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பாலம் "Adam's Bridge" அல்லது ராமர் பாலம் அங்கு இருந்ததாக உறுதிப்படுத்துகிறது//

"Adam's Bridge" ஆதம் என்கிற ஆதி மனிதரை குறிக்கும் பெயர் அது.சரி அப்படியே ஒரு பாலம் இருக்கட்டுமே. அதனால் என்ன? அமெரிக்கா சொல்ற எல்லாத்தையும் நாம கேட்டு கொள்ள முடியுமா? சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு லாபம் நமக்க அமெரிக்காவுக்கா.

//டி ஆர் பாலுவின் கப்பல் கம்பெனிக்கும் மற்றும் அரசியல் வணிகர்களுக்கும் வேண்டுமானால் சேது சமுத்திர திட்டத்தினால் பயன் கிடைக்கும்//

இந்த கருத்தை நீங்கள்தான் சொல்றீங்கள். இன்றைய இந்திய ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டம் வந்தாலும் அதில் பணக்காரர்கள் இலாபம் பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை அதற்காக இவர்களுக்க்காகத்தான் அந்த திட்டம் என்று முடிவு செய்துவிட முடியாது.

PUTHIYATHENRAL said...

//பல்லுயிர் பெருக்கம் - பவளப்பாறைகள் உடைப்பு - மீன் பிடி தொழில் பாதகம் என்று பல்வேறு காரணங்களினால் இந்தத் திட்டத்தை எதிர்த்த சுற்றுச்சுழல் ஆர்வளர்கள் உண்டு//

அப்படியும் சிலர் எதிர்த்தார்கள் என்பது உண்மையே. அவர்கள் உண்மையிலேயே சுற்றுப்புற சூழல் குறித்து அக்கறை கொண்டவர்கள் அவர்களிடம் கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்து கேளுங்கள் அவர்கள் அதையும் இதை காட்டிலும் கடுமையாக எதிர்ப்பார்கள் எதிர்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் இந்த ராமகோபால ஐயர் மற்றும் அவரது ஹிந்துத்துவா வகைறாக்கள் சுற்று புற சூழலில் அக்கறை கொண்டு அல்ல இதை எதிர்ப்பது தங்களது வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் காரியங்களில் இதுவும் ஒன்று. இதே ஹிந்துத்வா இயக்கங்கள்தான் கூடங்குளம் அணு மின்நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்துகின்றன.

Anonymous said...

எழிலி உன்னோட ஆரிய பார்பன குசும்பு மூளை நல்லாத்தான் வேலை செய்கிறது. நீ நடத்தும் {http://ezhila.blogspot.com/
எழில் இந்து நியூஸ் நெட்வொர்க்!} தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
இல் எப்படி எல்லாம் அடுத்த மதத்தை தாக்கி எழுதுகிறாய் என்கிற யோகிதை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். உனக்கு ஹிந்துத்துவா வெறி அதானால் அப்படி எழுதுகிறாய். ஏன் மறைந்து வந்து வேற ஆள்மாதிரி, நல்ல கருத்து சொல்வது மாதிரி இப்படி சொல்லி போகிறாய். இதற்க்கு வேற ஏதாவது செய்யலாமே. இப்பனு ஷாகீர் என்ற பெயரில் வந்து உன்குழப்பம் பலிக்க வில்லை என்பதால் இப்போது எழில் என்கிற பெயரை மாற்றி எழிலி என்று வருகிறாய். நல்லா இருக்கு உன் நடிப்பு. உன் கூட்டம் பாகிஸ்தான் கொடியை ஏற்றி மாட்டி கொண்டதே அதை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை. மத கலவரம் பண்றது தானே உன் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு வேலை. அது இனி தமிழர்களிடம் பலிக்காது.

-தலித் மைந்தன்-

தமிழ் மாறன் said...

தமிழர்கள் நலன் பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை இந்த ஒரு அணு உலையை அமைக்க அனுமதித்தால் போதும் தமிழகம் முழுவதும் அணுவுளைகலாக மாற்றி விடுவார்கள்.