Jan 4, 2012

பெண் டாக்டர் கொலையும் அதிர்ச்சி பின்னணியும்!

JAN 05: தூத்துக்குடி அழகிய துறைமுகப்பட்டினம். இதற்க்கு முத்து நகர் என்ற பெயரும் உண்டும். முக்கிய தொழில்களில் வளங்களில் ஒன்று உப்பு எடுப்பது.

இப்படிபாட்ட அழகிய நகரமான தூத்துக்குடி நீண்ட  காலமாக  ரவுடிகளின் கைகளில் சிக்கி கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என்று ரவுடிகள் சாம்பராஜியமாக ஆகிப்போனது. 

தூத்துக்குடி முக்கிய ரவுடிகள் பட்டியலில் திமுக எம்.எல்.ஏ. பெரியசாமி,  பசுபதிபாண்டியன் இவர்கள் அடக்கம். ரவுடிகள்தான் தூத்துக்குடியின்  எம்.எல்.ஏ.வாக வரமுடியும் என்ற ஒரு சிந்தனையும் நிலவிவந்தது. அப்படி நம்பித்தான் அதிமுக தூத்துக்குடியின் எம்.எல்.ஏ.வாக ரமேஷ் என்கிற ரவுடியை களம் இறக்கியது. பெரிய அரசியல் கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் தூத்துக்குடியில் திட்டமிட்டு ரவுடிகளை வளர்த்தனர்.

இப்படியாக அரசியல் பொறுக்கிகள் கையில் சிக்கி தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்களும், உப்பல தொழிலாளர்களும் அவதிப்பட்டனர். இது போதாதென்று தூத்துக்குடியின் சுகாதாரத்தை கெடுக்க ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை என்கிற ஆக்டோபஸ் வந்திறங்கியது. வடநாட்டில் எங்கும் அனுமதி கொடுக்கப்படாத இந்த ஆலை தமிழகத்தின் அரசியல் பொறுக்கிகளால் தூத்துக்குடியில் நிறுவப்பட்டு இன்றும் அந்த மக்களை கொல்லும் கொலை கருவியாக ஜொலிக்கிறது.

இப்படி  பல கொலைகளும், ஆள்கடத்தல்களும் நடக்கும் தூத்துக்குடி நகரம் இன்று அரசு டாக்டர் கொலை என்றதும்  அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன. அப்பாவி மக்கள் கொல்லப்படும்  போது போலீஸ் பொறுக்கிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு அதை ஊக்குவித்து வந்தனர். ஒரு டாக்டர் கொலையானதும் மொத்த டாக்டர்களும் ஊர்வலம், ஸ்ட்ரைக் என்று தமிழகம் முழுவதும் கிளம்பிவிட்டார்கள். இதே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது  இவர்களுக்கு ஆதரவாக யார் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.

டாக்டர் தொழில் என்பது ஒரு புனிதமானது, அது என்று வியாபாரம் ஆக்கினார்களோ அன்றே டாக்டர்கள் இதுபோன்ற அனத்தங்களை சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சாதாரண பிரசவம் ஆக இருக்கும் எத்தனையோ பெண்களை பணத்துக்காக ஆப்பரேசன் செய்து கொன்றிருக்கிறார்கள். மொத்தத்தில் டாக்டர்களை பற்றி மக்கள் மனதில் ஒரு கெட்ட அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

அதிகமான டாக்டர்கள் பண ஆசையில் செய்யும் கொலை பாதகத்துக்கு இதுபோல் சில டாக்டர்கள் பலியாகி போகிறார்கள் என்பது ஒரு சோகமான ஒரு நிகழ்வே. அரசு இயந்திரங்கள் சாதாரண மக்கள் விசயத்திலும் நீதி செலுத்த வேண்டும். அதுபோல் மக்களை சுரண்டும் டாக்டர்கள் விசயத்தில் சிறப்புச்சட்டம் கொண்டுவந்து இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
 *மலர்விழி*  

23 comments:

ஆனந்தன் said...

poda loosu

PUTHIYATHENRAL said...

நன்றி ஐயா!

ப.கந்தசாமி said...

பார்வை சரியில்லையே?

Anonymous said...

ஆனந்தனுக்கு இப்படி ஒரு விளம்பர நோக்கா! போடா லூசு என்று சொன்னால் உங்கள் பதிவை எல்லோரும் வந்து படித்து விடுவார்களா? என்ன.....

Anonymous said...

நல்ல பதிவு தோழி, தூத்துக்குடியின் கடந்த கால நிகழ்வுகளை பற்றியும் இப்போது நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு எழுதி இருப்பது நன்று. ////மாலதி.

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். by: RAJA.

HotlinksIN.cm said...

நேற்று அரசு மருத்துவர்கள் போராட்டம்... இன்று தனியார் மருத்துவர்கள் போராட்டம்... இவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமாம்... அரசு, ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் சந்தோஷப்படுவார்களோ? இவர்களின் அலட்சியத்தால் இதுவரை பறிபோனது எத்தனை உயிர்களோ...

Anonymous said...

காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல்
http://vennirairavugal.blogspot.com/

HOTLINKSIN.COM said...

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

Hotlinksin.com said...

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

shagitha said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Anonymous said...

உண்மைதான்... சேவை நோக்கோடு மருத்துவத் தொழிலில் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கொலை என்பது கண்டிக்கத்தக்கது என்றாலும் கொலை செய்யும் அளவுக்கு விரக்தியடைந்த அப்பெண்ணின் கணவனின் நிலையினை எண்ணிப் பார்க்கவேண்டும். சாதாரண ஆட்டோ ஓட்டுநருடன் அவர்களின் நண்பர்களும் உடன் வந்திருக்கிறார்கள் என்றால் டாக்டர்கள் குறித்து அனைவரின் எண்ணங்களும் எப்படி இருக்கின்றன என்பதற்கு அவர்கள் உதாரணம். இனியாவது மருத்துவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்வார்களா? --- வாகை

சந்ரு said...

சிந்திக்குவும் ஒரு இணையத்தளமா???????????

paarkka ==>> http://shanthru.blogspot.com/2012/01/blog-post_9594.html

சந்ரு said...

சிந்திக்குவும் ஒரு இணையத்தளமா???????????

paarkka ==>> http://shanthru.blogspot.com/2012/01/blog-post_9594.html

Anonymous said...

சந்ரு said...
ஒன்றை மட்டும் சொல்கிறேன் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் தமது அக்கா தங்கை தனைவி மக்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக் கொடத்துவிட்டு முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குங்கள் முஸ்லிம்களினால் கிழக்கு மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை மூடி மறையுங்கள்.

Anonymous said...

//பழனி.கந்தசாமி said...
பார்வை சரியில்லையே?//

அவர்கள் பார்வை சரியாகவே இருக்கிறது. இந்தியாவில் என்ன நடந்தாலும் அதை கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு எழுதவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு இணைய தளத்தை ஆரம்பித்தவர்கள். அந்த பார்வையில் இது சரியே!
கடைசியில் எழுத மறந்தது...அதனால் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கணும். ஓ.கே.வா!

Anonymous said...

சிந்திக்கவும் தளத்தில் உலகின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றானதின் தொடர்பான occupy wall street பற்றி எல்லாம் தேடித் தேடிப் பார்த்துவிட்டேன். ஏன் சார்/மேடம் அதைப் பத்தி எல்லாம் எழுதமாட்டீங்களா..(இல்ல நான்தான் உங்கள் தளத்தை சரியாக பார்க்கவில்லையா?) உங்களுக்கு அருகில் இருக்கிறதப் பத்தி எழுதமாட்டீங்க...ஆனா இலங்கை பத்தியும் இந்தியா பத்தியும் ?(90% பதிவுகள்) அதுவும்...இணையதளத்திலேயே எல்லாத்தையும் பத்தி படிச்சுட்டு எழுதித் தள்ளுவீங்க.நிச்சயமா ஒரு விஷயம் சொல்வேன். நீங்க இலங்கைல இருக்கும்போது அதைப் பத்தி பேசி இருக்கவேமாட்டீங்க...நமக்கு வேற ஒரு நாட்டுக்கு ஓடிப் போனதுக்கு பிறகுதானே அடுத்தவனுக்கு அறிவுரை சொல்ற 'வீரம்' வரும்.

PUTHIYATHENRAL said...

சந்ரு என்பவரைப்பற்றி அந்த பதிவில் எதுவும் சொல்லப்படவில்லை. அது பொதுவாக எழுதப்பட்டது. சிந்திக்கவும் தனி மனித விமர்சனம் செய்யாது. அதனால் இவரது அறியாமைக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என்றே நம்புகிறோம். அதுபோல் இவர் கீழ்த்தரமாக ஒரு கருத்தை வந்து பதிந்து விட்டு போயிருக்கிறார். இவர் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். இது சிந்திக்கவும் குழுமத்தினரை ஒட்டுமொத்தமாக குறிக்கும். அநாகரிகமான இவரது கருத்தை நீக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் அது சிந்திக்கவும் இணையத்தை நோக்கி சொல்லப்படிருப்பதால் அதை நீக்க தேவையில்லை என்று மற்ற ஆசிரியர்கள் கருத்து சொன்னார்கள். கருத்து சொன்னமைக்கு நன்றி மிஸ்டர் சந்ரு.

Anonymous said...

நல்ல அருமையான பதிவு, தூத்துக்குடி ரவுடிசம் எப்படி தெளிவா சொன்னமைக்கு நன்றி.

ஜேசு பெர்னாந்து - தூத்துக்குடி.

PUTHIYATHENRAL said...

வீணாக குழம்பிக்கொள்ள வேண்டாம் நண்பர்களே. சிந்திக்கவும் இணையத்தளம் ஒரு தமிழர் ஆதரவு தளம். அதனாலேயே தொடர்ந்து தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகள், குறித்து எழுதிவருகிறோம். தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று நினைக்கும் கோடிக்கணக்கான மக்களுள் நாங்களும் அடங்குவோம். போலியான தேசபக்தி முகமூடி போடவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகிறோம்.

PUTHIYATHENRAL said...

வாசகர் கருத்தில் ஆயிரம் சொல்லுவார்கள் கேவலமா எங்களை திட்டி போட்டிருக்கும் கருத்துக்களையும் நீங்கள் படிக்கத்தானே செய்கிறீர்கள்.

Admin said...

இதற்கு முன்னர் போடப்பட்ட பின்னூட்டங்கள் எதுவும் என்னால் போடப்பட்டதல்ல. கிழக்கிலே நடக்கின்ற தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் அடாவடித்தனங்களை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதியவன் நான் அதன் பின்னர்தான் தமிழ் மஸ்லிம் பதிவர்களிடையே கரத்த ஆமாதல்கள் வலுப்பெற்றன்.

கிழக்கு மாகாணம் தொடர்பாகவும் கிழக்கிலே தற்போது என்ன நடக்கின்றது என்பது தொடர்பாகவும் உங்களுக்குத் தெரியுமா? உண்மைகளை யதார்த்தங்களை புரிந்துகொண்டு எழுதுங்கள். உங்களுக்கு பின்னுஸட்டமிடவேண்டிய தேவை என்னவெனில் உங்கள் பதிவில் தனிமனித தாக்குதல் இடம்பெறுகின்றபோது அதனை நீக்கிவிடுவதுதான் ஒரு ஊடகத்தின் வலைப்பதிவரின் நேர்மை. என்னையும் சில வலைப்பதிவர்களையும் பற்றி பின்னூட்டம் வந்தபோது அதனை நீக்கியிருக்க வேண்டும். நீங்கள் பதிவர்களையும் மக்களையும் மோதவிட்டு ஹட்ஸிக்காக எழுதுபவர்களே.

தமிழ் மாறன் said...

அரசியல் ரவுடிசம், மற்றும் டாக்டர்களின் செயல் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி.