Mar 1, 2011

பனைமரத்தில் "தேள் கடித்தால்" தென்னை மரத்தில் நெறிகட்டுகிறது.

வாஷிங்டன் பிப்,2: "இந்தியாவில் கட்டுமானத்துறைக்கு பெரும் மூலதனத்தை கொண்டுவரும் வகையிலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது புகழத் தக்க பட்ஜெட் என்று அமெரிக்க கம்பெனிகள் பாராட்டியுள்ளன. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டு முதலீட்டை கவரும் வகையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்திய பரஸ்பர நிதி திட்டங்களில், பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தாராளமயமாக்கப் பட்டுள்ளது. இதை அமெரிக்க கம்பெனிகள் வெகுவாக பாராட்டியுள்ளன. இதன் மூலம் கட்டுமான திட்டங்களுக்கு இந்தியா நிதியை பெற முடியும். அமெரிக்க நிறுவனங்களும், முழுமையாக பங்கு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பனைமரத்தில் தேள் கடித்தால் தென்னை மரத்தில் நெறிகட்டுகிறது என்று பழமொழி சொல்வார்களோ. என்ன ஒரு கரிசனை! ஒ மைகாட்! புல்லரிகிறது.

No comments: