Feb 14, 2010

சோசியல் டெமோக்ரேடிக் பார்டிக்கு இன்னொரு வெற்றி.

ராஜஸ்தான் மாநிலத்திலிலுள்ள பரால் மாவட்டத்திலிலுள்ள பல்தாரா கிராம பஞ்சாயத்தில் துணைத்தலைவராக(உப்ஸார்பன்ஞ்ச்) சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலக பொறுப்புதாரி 32 வயதான முஹம்மது ரிஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல்தாரா கிராம பஞ்சாயத்தில் 11-வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ரிஸ்வான் வெற்றிப்பெற்று துணைத்தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்ற முறை பாரதீய ஜனதாவைச்சார்ந்த தஸ்னீம் பானு துணைத்தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சவாய் மதோபூர் மாவட்டத்தில் சன் பஞ்சாயத்தில் முஹம்மது ஹனீஃப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.இத்தகவலை எஸ்.டி.பி.ஐ யின் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் தெரிவித்தார்

No comments: