Dec 21, 2009

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஆஸி. கப்பல் கண்டுபிடிப்பு


இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்தபோது 1943 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, ஆஸ்ட்ரேலியாவில் இருந்த ஏ.எச்.எஸ். சென்டார் என்ற கப்பல், ஜப்பான் நீர்மூழ்கி கப்பலால் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

இதில் அந்த கப்பல் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த கப்பலை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

தீவிர தேடுதலின் பலனாக, தற்போது இக்கப்பல் குவின்ஸ் லேண்டு மாகாணத்தில் பிரிஸ்பேன் நகர் பகுதியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை தண்ணீருக்குள்ளிருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதற்கான முயற்சி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

No comments: