Dec 20, 2009

கிறித்தவ மத பிரச்சாரக் கண்காட்சி மீது தாக்குதல் - தீவிரவாத பா.ஜ.க. நிர்வாகி கைது

குவாலியரில், கிறிஸ்துவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 வருடங்களாக மதப் பிரச்சார கண்காட்சியை நடத்துவது வழக்கம். அதுபோலவே இந்த வருடமும் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்தி வந்தனர். அது வரும் கிறிஸ்மஸ் தினத்தன்று முடிவடைவதாக இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று திடிரென்று வந்த ஹிந்து தீவிரவாத கும்பல் ஒன்று கண்காட்சிக்குள் புகுந்து கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த படங்களை கிழித்தெறிந்தனர். அங்கிருந்த உருவ பொம்மைகளையும் சேதப்படுத்தி, மத வாசங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இதைத் தொடர்ந்து கண்காட்சியின் அமைப்பாளர் அளித்த புகாரின் பேரில் போலிசார் நால்வரை கைது செய்தனர். இதில் ஒருவரான சந்தோஷ் கொத்கொலே தீவிரவாத பா.ஜ.க.வின. வட்டார நிர்வாகி ஆவார். இவருடன் தீவிரவாதிகள் பிரமோத், ராஜூ, மனோஜ் கத்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

No comments: