Nov 26, 2015

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நாள்!

நவம்பர் 26/2015: நவம்பர் 26/2008 மாவீரன் ஹேமந்த் கர்கரேவை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா தீவிரவாதிகளால் திட்ட மிட்டு கொலை செய்யப்பட்ட நாள்.


இவர் இந்திய தீவிரவாத தடுப்பு படையின் தலைவராக இருந்த நேரத்தில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்பதை கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தவர்.  

மாலேகான் குண்டு வெடிப்பு தொடங்கி சம்ஜா ரயில் குண்டு வெடிப்பு வரை இந்தியாவில் நடந்த அத்தனை தொடர் கொண்டு வெடிப்புகளின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இருந்தார்கள் என்பதை கண்டுபிடித்தார்.

தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்து சாமியார்கள் அசிமானந்தா, சாத்வி பிரஞ்யா, முன்னாள் இந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல்  புரோகிதையும் கைது செய்ய காரணமாக இருந்தார். 

இதனால் நரேந்திர மோடிஎல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, மற்றும் பல ஹிந்து தீவிரவாத இயக்கத் தலைவர்களின் விமர்சனத்துக்கும் ஆளானவர். ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் இவருக்கு குறி வைத்திருந்தது. இதை தொடர்ந்து மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளோடு நடந்த சண்டையில் இவர் கொல்லப்பட்டார். 

இவரது மரணத்தில் உள்ள சந்தேகம் இன்றும் தெளிவாக்கபடவில்லை. ஒரு தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவரே நேரடியாக சண்டையில் ஈடுபட்டு சாக கூடிய நிலைமை என்பது மிகவும் சந்தேகத்திற்கு உரியது. அதுவும் சாதாரண துப்பாக்கி சண்டையில். இவர்தான் தீவிரவாத எதிர்ப்பு படைபிரிவின் கமான்டிங் ஆபிசர். இவர் புல்லட் புரூப் ஜாக்கெட் வேறு அணிந்திருந்தார். தீவிரவாத எதிர்ப்பு படை பிரிவின் தலைவரையே சுட்டு கொல்லும் அளவுக்கு அங்கே மிகபெரிய துப்பாக்கி சண்டைகள் நடக்கவில்லை. அந்த இடத்தில் ராணுவமும், துணை போலிஸ் படை பிரிவுகளும் இருந்தன. 

இந்த துப்பாக்கி சண்டையை பயன்படுத்தி இவரை இந்திய ராணுவத்தில், அல்லது போலிஸ் துணை படை பிரிவில், அல்லது இவரது தீவிரவாத தடுப்பு படையில் இருந்த யாரோ ஒருவரே இவரை சுட்டிருக்கிறார்கள் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இதையே இவரது மனைவியும் தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

No comments: