Nov 17, 2015

தொடரும் ஹிந்துத்வாவின் கயமைத்தனம்!

மாவீரன் திப்பு சுல்தானின்  பிறந்த நாள் விழாவை கர்நாடக அரசு  கொண்டாட முடிவு செய்ததை ஓட்டி ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா வெறியர்கள் கர்நாடகாவில் கலவரம் செய்து வருகின்றனர்.
அரசிற்கு ஆதரவாக திப்பு பிறந்தநாள் விழாவை கொண்டாட ஊர்வலமாக சென்றவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா வெறியர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சாகுல் ஹமீது என்ற இளைஞர்  உயிரிழ்ந்துள்ளார். 
இந்த படுகொலைக்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் குட்டப்பா முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக ஹிந்துத்துவா இயக்கங்கள் விசமப்பிரச்சாரம் செய்தது பொய் என்று அம்பலமாகியுள்ளது. இது குறித்து விசாரித்த காவல் துறையினர் அவர் 20 அடி சுவரிலிருந்து விழுந்து விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். ஒரு ஹிந்துத்துவா வெறியன் எப்படி செத்தாலும் அதை வைத்து கலவரத்தை எப்படி உண்டாக்கலாம்? என்று யோசித்து கொண்டே இருப்பார்கள் போல் இருக்கிறது. எவ்வளவு கேவலமான செயல். 
காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்க பயங்கரவாதி கோட்சே தன் கையில் முஸ்லிம் பெயரை பச்சை குத்தி கொண்டு, காந்தியை கொன்றது முஸ்லிம்கள் என்று சொல்லி அதை வைத்து கலவரத்தை உண்டாக்கியது. இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி முஸ்லிம் இளைஞ்சர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. கோத்ரா ரயிலை கொளுத்தி அதை வைத்து குஜராத் கலவரத்தை நடத்தியது கோவில்களில் பசுமாட்டு தலைகளை போட்டு பல இடங்களில் கலவரங்களை நடத்தியது. கர்நாடகா மாநிலத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் தலையில் போடும் முயற்சியில் கையும்களவுமாக பிடிபட்டது,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் இவர்களே கல்லை தூக்கி அடித்து கலவரங்களை தூண்டுவது, இப்படியாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். ஹிந்துதுவாவின் கயமைதனம் தொடர்கிறது.  

No comments: