Sep 30/2013: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாட உலக மத பாராளுமன்ற அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளையான வி.ஹெச்.பி.ஏ. (Vishwa Hindu Parishad of America) ஏற்பாடு செய்த விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை புறக்கணிக்க ஏற்கனவே உலக மத பாராளுமன்ற (Council for World Parliament of Religions) அமைப்பு தீர்மானித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எந்த ஹிந்துத்துவா அமைப்புகளுடனும் தங்களுக்கு தொடர்பில்லை என்று விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை கூறியிருந்தது. ஆனால், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி (C.A.G.) உலக மத பாராளுமன்ற அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் VHPA மற்றும் இந்தியாவில் உள்ள VHPக்கும் இடையேயான உறவுகளை விவரிக்கும் ஏராளமான ஆதாரங்களை குறிப்பிட்டிருந்தது.
பிரிவினையை தூண்டும் அமைப்புகளை புறக்கணிக்கவும், விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாடவும் உலக மத பாராளுமன்ற அமைப்பு (Council for World Parliament of Religions) எடுத்த முடிவை C.A.G.யின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ராஜா சுவாமி பாராட்டியுள்ளார். இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரும் சுப்ரமணிய சுவாமிதான் VHPA. (Vishwa Hindu Parishad of America) ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முக்கிய உரையை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 comments:
தனி நாடு கோருவது இஸ்லாமியர்களின் உரிமை என்றால் இந்துக்கள் அவ்வாறு கோருவது மட்டும் நியாயம் இல்லையா?
எந்த இஸ்லாமிய அமைப்புக்கள் பிரிவினை அல்லாமல் பிற மதத்துடன் இணக்கமாக ஒற்றுமையாக சொல்கின்றன? இஸ்லாமியர் எதுவும் செய்தால் அது அவர்களின்சட்டபடி நியாயம் அதனை எவரும் கேட்க முடியாது. ஆனால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அதே போன்ற தனி அணுகுமுறையை பின்பற்றினால் அது மத அடிப்படை வாதம்! பயங்கர வாதம்!! அண்ணே, தேடி தேடி பிடித்து இந்துக்களுக்கு எதிராக பதிவுகளை போடும் உங்களின் மகா நேர்மை இங்கு வலையுலகில் பிரசித்தம் அண்ணே!அதனால்தான் உங்கள் இஸ்லாம் மத வெறி பொங்கி வழியும் கட்டுரைகளை பெரும்பாலோர் படிப்பதில்லை. படித்தாலும் "குப்பைகள் " என்று ஒதுக்கித்தள்ளும் நிலைதான் அண்ணே !
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Post a Comment