Jun 11, 2011

சர்கஸ் நடத்தும் ஹசாரே, ராம்தேவ்: மணிசங்கர் அய்யர் !!!

JUNE 12, அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரிலும்,பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது.
 
அவர்கள் இருவரும் சர்க்கஸ் நடத்தினார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா ஹசாரேஜந்தர் மந்தரிலும்,  பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது.

அவர்கள் இருவரும் சர்க்கஸ் நடத்தினார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எனவேதான் அவர்களின் போராட்டத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருவரும் முறையிட விரும்பி இருந்தால் முறைப்படி சம்பந்தப்பட்ட நிலைக்குழுவை அவர்கள் அணுகியிருக்க வேண்டும்.  அதைவிடுத்து போராட்டம் என்ற பெயரில் சர்க்கஸ் நடத்த முயலக்கூடாது.

இவர்கள்தான் இப்படி என்றால் மத்திய அரசின் செயல்பாடும் மோசம். பாபா ராம்தேவ் போராட்டம் என்று அறிவித்தவுடன் அவரை சமாதானப்படுத்த அமைச்சர்களை அனுப்பி வைக்கிறார்கள்.  நான் பிரதமராக இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு செயலை செய்திருக்க மாட்டேன் என்றார்.

No comments: