Aug 29, 2013

தீவிரவாதிகள் கைது! சதிகள் முறியடிப்பு!

தமிழகத்தில் அண்மைக்காலமாக தீவிரவாத செயல்கள் எதுவும் இல்லை என்றும் அது போன்றதொரு நடவடிக்கையோ, செயல்பாடோ இங்கு இல்லை என்றும் தமிழக முதல்வரே பல அறிக்கைகள் கொடுத்துள்ளார். ஆனால் அதனை களங்கப்படுத்தும் விதத்தில், முதல்வரின் கூற்றுக்கு மாற்றமாக சமீப காலமாக தீவிரவாதிகள் கைது, சதிகள் முறியடிப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் என்பன போன்ற பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இச்சூழலில் தான், இலங்கையிலிருந்து மணியாச்சி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு மர்ம டெலிபோன் வந்ததாகவும், 35 தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களும், மீடியாக்களும் பரபரப்பு செய்திகள் வெளியிட்டன. செல்போன், இன்டர்நெட், ஸ்மார்ட் போன்கள் என நவீன தொழில்நுட்பம் கிராமங்களில் கூட நுழைந்துள்ள இந்த காலக்கட்டத்திலும், தண்டோரா போட்டு மக்களை பதட்டத்தில் ஆழ்த்துவது, அதனை நாளேடுகளில் புகைப்படத்துடன் செய்தியாக வெளியிடுவது என்பது புதுமையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

கணவன்-மனைவி தகராறு, காதலன்-காதலி பிரச்சனை, வீட்டுஓனர்-குடியிருப்பவர் பிரச்சனை என பலவிஷயங்களில் அடுத்தவரை மாட்டி விடுவதற்காக இதுபோன்று பீதிவயப்படுத்தும் வகையில் ஏராளமான பலமர்ம தொலைபேசிகள் வருவதும், அவை கையும் களவுமாக காவல்துறையால் கண்டுபிடிக்கப்படுவதும் என்பன போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நினைவுபடுத்துகிறோம்.

ஏன், கடந்த வருடம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால் ஒரு உளவுத்துறை அதிகாரியே சி.பி.ஐ. அலுவலகத்திற்கு இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் மர்ம டெலிபோன் செய்து, கையும் களவுமாக மாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூட, மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் தங்யிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததும், தேர்வு பயத்தின் காரணமாக ஒரு மாணவரே அதனை செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே இதுபோன்ற செய்திகள், சமூகத்தின் சமநிலைத் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு கடற்கரையோர மாவட்டங்களையும் தமிழகத்தின் இதர பகுதிகளையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல், தீவிரவாதிகள் ஊடுருவல் என மக்களை பீதிவயப்படுத்தும் வகையில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலான உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல், 23.08.2013 அன்று தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடித்துறைமுகத்திற்கு சுற்றுலா சென்றிருந்த 6 முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தது, மேலப்பாளையம் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்குமோ? எனும் ரீதியில் இன்று (28.08.2013) வெளிவந்த செய்தி போன்றவைகள் முஸ்லிம்களை தீவிரவாத கண்ணோட்டத்தோடு அணுகுவதும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் செயலாகும். நடுநிலைத்தன்மைக்கு இது ஏற்புடையதல்ல.

ஆகவே, இது விஷயத்தில் பொது சமூகத்தின் சமநிலை பாதிக்கப்படும் அளவிற்கு பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தாத வகையில் தங்கள் நடவடிக்கைகளை காவல்துறை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிறுபான்மை சமூகத்திற்கும் பொது சமூகத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடுநிலையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இது போன்ற தகவல்கள் அரசின் கவனத்தை எட்டும்போது அதனை நன்கு ஆராய்ந்து பதட்டத்தைத் தணிக்கும் வகையிலும் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காத வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையையும், உளவுத்துறையையும் அறிவுறுத்த வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
மாநில ஊடக தொடர்பாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
சென்னை: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பரபரப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து மக்களின் பீதியைப் போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அதன் மாநில ஊடக தொடர்பாளர் ஏ. ஃபக்ருதீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் அண்மைக் காலமாக தீவிரவாத செயல்கள் எதுவும் இல்லை என்றும், அது போன்றதொரு  நடவடிக்கையோ, செயல்பாடோ இங்கு இல்லை என்றும் தமிழக முதல்வரே பல அறிக்கைகள் கொடுத்துள்ளார். ஆனால் அதனை களங்கப்படுத்தும் விதத்தில், முதல்வரின் கூற்றுக்கு மாற்றமாக சமீப காலமாக தீவிரவாதிகள் கைது, சதிகள் முறியடிப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் என்பன போன்ற பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இச்சூழலில்தான், இலங்கையிலிருந்து மணியாச்சி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு மர்ம டெலிபோன் வந்ததாகவும், 35 தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களும், மீடியாக்களும் பரபரப்பு செய்திகள் வெளியிட்டன.
செல்போன், இன்டர்நெட், ஸ்மார்ட் போன்கள் என நவீன தொழில்நுட்பம் கிராமங்களில் கூட நுழைந்துள்ள இந்த காலக்கட்டத்திலும், தண்டோரா போட்டு மக்களை பதட்டத்தில் ஆழ்த்துவது, அதனை நாளேடுகளில் புகைப்படத்துடன் செய்தியாக வெளியிடுவது என்பது புதுமையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.
கணவன்-மனைவி தகராறு, காதலன்-காதலி பிரச்னை, வீட்டு ஓனர்-குடியிருப்பவர் பிரச்னை என பல விஷயங்களில் அடுத்தவரை மாட்டி விடுவதற்காக இதுபோன்று பீதிவயப்படுத்தும் வகையில் ஏராளமான பல மர்ம தொலைபேசிகள் வருவதும், அவை கையும் களவுமாக காவல்துறையால் கண்டுபிடிக்கப்படுவதும் என்பன போன்ற  பல சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நினைவுபடுத்துகிறோம்.
ஏன், கடந்த வருடம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால் ஒரு உளவுத்துறை அதிகாரியே சி.பி.ஐ. அலுவலகத்திற்கு இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் மர்ம டெலிபோன் செய்து, கையும் களவுமாக மாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கூட, மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் தங்யிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததும், தேர்வு பயத்தின் காரணமாக ஒரு மாணவரே அதனை செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே இதுபோன்ற செய்திகள், சமூகத்தின் சமநிலைத் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு கடற்கரையோர மாவட்டங்களையும் தமிழகத்தின் இதர பகுதிகளையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல், தீவிரவாதிகள் ஊடுருவல் என மக்களை பீதிவயப்படுத்தும் வகையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலான உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக  தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல், 23.08.2013 அன்று தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திற்கு  சுற்றுலா சென்றிருந்த 6 முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தது, மேலப்பாளையம் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்குமோ எனும் ரீதியில்  இன்று (28.08.2013) வெளிவந்த செய்தி போன்றவைகள் முஸ்லிம்களை தீவிரவாத கண்ணோட்டத்தோடு அணுகுவதும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயலாகும். நடுநிலைத்தன்மைக்கு இது ஏற்புடையதல்ல.
ஆகவே, இது விஷயத்தில் பொது சமூகத்தின் சமநிலை பாதிக்கப்படும் அளவிற்கு பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தாத வகையில் தங்கள் நடவடிக்கைகளை காவல்துறை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிறுபான்மை சமூகத்திற்கும் பொது சமூகத்திற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடுநிலையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இது போன்ற தகவல்கள் அரசின் கவனத்தை எட்டும்போது அதனை நன்கு ஆராய்ந்து பதட்டத்தைத் தணிக்கும் வகையிலும் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காத வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையையும்,  உளவுத்துறையையும் அறிவுறுத்த வேண்டும் எனவும்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில ஊடக தொடர்பாளர் ஏ. பக்ருதீன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be/#sthash.o3Rcixwa.dpuf

1 comment:

faizeejamali said...

ஆமாம் உன்மைதான் அரசு இது விஷய்த்தில் கவனம் செலுத்த வேன்டும்