Apr 6, 2011

பிரிட்டனின் புதிய ரூல்ஸ்!! இந்தியர்களுக்கு வேட்டு !!!

ஏப்ரல் 6,பிரிட்டன் நாளை முதல் அமல்படுத்த உள்ள புதிய குடியேற்ற விதிகள் காரணமாக ஏராளமான,இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர் பிரிட்டனில் குடியேறுவதைக் குறைப்பதற்காக பிரதமர் டேவிட் கேம்ரூன் தலைமையிலான அரசு இந்தப் புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலாவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான எண்ணிக்கையும் மட்டுபடுத்தப்படும்.

மேலும் ஏற்கனவே பிரிட்டனிலேயே குடியேறியவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் இந்திய பணியாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது

No comments: