Apr 25, 2011

ஊடக பண்முகம்!!!!!!

என் துயர் நீங்க....
உன் மடி சாய்ந்தால் .... உன்
வருடல் எனக்கிதமாய்
இருக்கும்.

உனது பார்வை....
கனிவாய் தோன்றும்....
எனக்கிழைத்த கொடுமையை
உன் செவி சேர்த்தால்....
நீ கவனமாய் கேட்பாய்.

ஆனால் .......... நீ கழுகு
உனது இலக்கு மட்டும்....
தெளிவாய் தெரியும்....
உனது காலடியில் தஞ்சமடைந்த
கோழி குஞ்சு நான்....

நீ நினைத்தால்!!!!
கொடூர கொலையை....
சாதாரணமான மரணமென்பாய்....
சாதாரண மரணத்தை கொடூர கொலை என்பாய்....
கொலையாளியை வீரன் என்பாய்.

அழிந்து வரும் சமூகத்தில்!!!!
எழுந்து நிற்பவனை தீவிரவாதி என்பாய்....
உன் சொல் அம்பலமேறும்
என் சொல் செவிடன் காதில் சங்குதான்....
ஊடகமே நீ யார்? கையில் இருக்கிறாய்....
எமபாதகனிடமா????

சிந்திக்கவும்.நெட், வாசகர் கவிதை: MR. ராஜ யோகி.

நீங்களும் கவிதை எழுதலாம் வாருங்கள். நல்ல சமூக பொறுப்புள்ள கவிதைகளை எழுதுங்கள்!! நீங்கள் உங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி sinthikkavum@yahoo.com, puthiyathenral@gmail.com

No comments: