
இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருத்தது.
இந்த சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம்.
214 கோடி ரூபாய் ஷாகி பால்வாவால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம். மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த 214 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை சென்றடைந்து இருக்கு.
எனவே, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும்.
கனிமொழி உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
No comments:
Post a Comment