
அந்த அளவுக்கு நர்சுகள் தட்டுப்பாடு உள்ளதால் ஆண்டுக்கு 10 இலட்சம் குழந்தைகள் பலியாகின்றன என்பது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கர்ப்பிணி பெண்கள் தக்க மருத்துவ உதவி, பிரசவ கால நிபுணர்கள் உதவி இல்லாமல் 3ல் ஒரு பெண், அதாவது 4 கோடியே 80 இலட்சம் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
பிரசவ காலத்தின் போது எளிதில் தீர்க்கக்கூடிய சிக்கல்களுக்கு தினமும் ஆயிரம் பெண்களும், 2 ஆயிரம் வரையான குழந்தைகளும் உலகெங்கும் பலியாகிறார்கள்.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 7 இலட்சத்து 49 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அங்கு 26 ஆயிரத்து 825 நர்சுகள் பணிபுரிகிறார்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் ஆண்டு தோறும் 4 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அங்கு 46 தாதிகள் தான் இருக்கிறார்கள்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவில் குழந்தைகள் இறக்கிறார்கள்.
அங்கு பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் 52 குழந்தைகள் இறந்து போய் விடுகின்றன.
No comments:
Post a Comment