Dec 31, 2010

2011 புத்தாண்டு சிந்தனைகள்.

சிந்திக்கவும்: புத்தாண்டு கொண்டாட்டம் என்றபெயரில் உலகம் முழுவதும் வெடிக்கப்படும் வெடிகள் எத்தனையோ கோடி ரூபாய்களை தாண்டும். எத்தனையோ நாடுகளில் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஒருவேளை உணவு இல்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த சூழலில் இது போன்று பணத்தை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் வீணடிக்காமல் இந்த புத்தாண்டில் அது போன்ற மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த பணங்களை அனுப்பி கொடுத்தால் அதில் கொஞ்ச மக்களை காபாற்ற உதவும். இது ஒவ்வொரு மனித நேயம் உள்ள மனிதனின் கடமையாகும். இந்த புத்தாண்டில் இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்த்து. தினம்தினம் மருத்துவ மற்றும் உணவு வசதி இல்லாமல் சாகும் மக்களை பற்றி சிந்திப்போமாக, அவர்களது நல்வாழ்வுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று உறுதி எடுப்போம். அன்புடன் ஆசிரியர்.

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மிக நல்லதொரு தெளிவான சிந்தனை. பணக்காரர்கள் வெடிகள் மூலம் பணத்தை கரியாக்கும் முன் ஏழைகளை நினைத்தால் உலகில் பல குழப்பங்கள் உலகில் தீரும்.

http://pinnoottavaathi.blogspot.com/2011/01/2010.html

ADMIN said...

<<<<<>>>> மிகச்சிறப்பான சிந்தனையைத் தூண்டும் வரிகள்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..!