
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது.இந்த நிகழ்வில் வைகோ, பழ நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பழ நெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5 ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். இப்போது மறைவாக உள்ள அவர், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருணத்தில் வெளியில் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்”, என்றார்.
No comments:
Post a Comment