Nov 28, 2010

சீனாவிடம் இருந்து இலங்கையை மீட்கவே கிருஷ்ணா அனுப்பப்பட்டார்! ஆனால் அது முடியாது! : பழ. நெடுமாறன்.


துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், இலங்கைக்கு எவ்வித நிபந்தனையுமில்லாமல் பொருளாதார உதவிகளை இந்தியா வாரி வாரி வழங்கி வருகிறது. இதன் மூலம் சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு விடலாம் என்று இந்தியா நம்புகின்றது. ஆனால் அது இந்தியாவால் முடியாத காரியம். இலங்கை என்றும் சீனாவுடன்தான் இருக்கும். இந்தியா இந்தவிசயத்தில் ஏமாறபோகிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.எஸ்.எம் கிருஷ்ணா இலங்கைத் தமிழர்கள் நிலைகுறித்துப் பேசுகையில் அந்நாட்டு அரசிற்கு சாதகமாகவே பேசியதை சுட்டிக்காட்டி, இது தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகம் என்று நெடுமாறன் சாடியுள்ளார்.

No comments: