Feb 20, 2010

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோமாளியும் மான ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்.

டெல்லி: ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் தீவிரவாத பாரதிய ஜனதாவின் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோமாளியும் மான ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீரென மாயமாகிவிட்டார். சொத்துக்களுக்காக அவரை மனைவியே கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கோமாளி உள்துறை அமைச்சராக இருக்கும் பொது அமெரிக்கா விஜயம் செய்தார் அப்போது இவரை அமெரிக்கா குடிவரவு துறை அதிகாரிகள் இவரை நிர்வாணமாக சோதனை செய்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

26 ஆண்டுகளாகவே தனியே வசித்து வந்த பெர்னாண்டசுக்கு கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஞாபக மறதி நோயும் (Alzheimer's disease) தாக்கியுள்ளது. இதனால் தன்னைச் சுற்றி நடப்பதை அவர் அறியாத நிலையில் உள்ளார்.
இவரது மனைவி லீலா. இவர்களது மகன் சீன். இவர்கள் பெர்னாண்டஸைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் பெர்னாண்டசில் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் லீலாவும், சீன் பெர்னாண்டசும் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.

அதுவரை பெர்னாண்டஸை கவனித்து வந்த அவரது உறவினர்கள், சில உதவியாளர்களை அவர்கள் விரட்டியடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் கடைசி காலத்தில் பெர்னாண்டசின் ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரிக்கவே அவர்கள் வந்துள்ளதாக புகார் எழுந்தது. ஆனால், பெர்னாண்டசின் நண்பர்களும் உறவினர்களும் தான் சொத்தை கைப்பற்ற முயல்வதாக லீலா புகார் கூறி வந்தார். மேலும் அவர்கள் தனது கணவரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

சிந்திக்க: முஸ்லிம் விரோதிகளுக்கு இமையிலும் இழிவுதான் மறுமையிலும் இழிவுதான்.

No comments: