Dec 18, 2009

ரங்கநாத் அறிக்கை மதமாற்றத்தை ஊக்குவிக்கும்: பாஜக! அரசியல் சட்டத்துக்கு முரணானது :தீவிரவாத வி.ஹெச்.பி

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஷ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தீவிரவாத பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பாதிக்கும் என்றும் அக்கட்சி மேலும் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்மொழிகிறது. சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அது மதமாற்றத்தை ஊக்குவிக்கும். மேலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தேச விரோதம் என்று தீவிரவாத பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீவிரவாதி ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.

ரங்கநாத் மிஷ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தீவிரவாதி ராஜீவ் கூறியுள்ளார். ஆணையத்தின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசு, இந்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறாததையும் தீவிரவாதி ராஜீவ் குறை கூறினார்.

அரசியல் சட்டத்துக்கு முரணானது : தீவிரவாத வி.ஹெச்.பி

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்து செய்துள்ள நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று தீவிரவாத விசுவ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர் தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீவிரவாத விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேசத் தலைவர் தீவிரவாதி பிரவீன் தொகாடியா, "ரங்கநாத் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை விசுவ இந்து பரிஷத் முழுமையாக நிராகரிக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு முரணானது. தேசவிரோமானது. இந்து மத விரோதமானது" என்று கூறினார்.

No comments: