Sep 10, 2018

பாரத் பந்த் முழு வெற்றி!

SEP 10/2018 : பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து நடந்த பாரத் பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது.  பாசிச பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோத ஆட்சி மற்றும் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நடந்த பாரத பந்த் முழு அளவில் வெற்றி பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த பந்திற்ககு இந்திய அளவில் 21 எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆ.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சி பொறுப்பில் ஏறியதில் இருந்து நாட்டு மக்கள் மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்தப்பட்டனர். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பறிப்பு, ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மாட்டின் பெயரால் நாடு முழுவதும் மனிதர்களை கொன்று குவித்ததது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் உள்ள சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் கொல்லப்பப்படுவது சிறையில் அடைக்கப்படுவது போன்ற எண்ணற்ற துயர சம்பவங்கள் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன. 

மேலும் இந்திய பாசிச பயங்கரவாத பிரதமர் மோடி தமிழகத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட மோசகரமான திட்டங்கள் பல, கூடங்குளம் அணு மின்நிலையம், ஸ்டெரிலைட் ஆளை, மீத்தேன், ஈத்தேன், சேலம் 8 வழி சாலை, தேனி நியூட்ரினா திட்டம், சாகர் மாலா திட்டம் இப்படி அடிக்கி கொண்டே போகலாம். இந்நிலையில் இந்த பயங்கரவாத பாசிச பாரதிய ஜனதா ஒழிக என்ற கோஷம் நாடுமுழுவதும் ஒழிக்க தொடங்கி உள்ளது. இதன் ஒரு வெளிப்பாடே இந்திய அளவில் 21 கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய மிகப்பெரிய பாரத பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது. வருகிற தேர்தலில் பிஜேபி வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் மனநிலையாகும். 

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றால் 

No comments: