Nov 13, 2014

வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்!?

போட்டோவில் உள்ள 22 வயதான குமார் சின்ஹே என்பவன். இஞ்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாத காரணத்தால் மிரட்டி பணம் வாங்கும் வேலையில் ஈடுபட்டான்.

பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்பிற்கும், கலவரத்திற்கும் காரணம் ஃபாஸிஸ சங்கப்பரிவார கும்பல் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை.
மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், கோவா, ஹுப்ளி, அஜ்மீர் தர்கா, தென்காசி ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்திய சங்கப்பரிவார கும்பல் என்பதும், அதனை முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி யூகத்தின் அடிப்படையில் புதிய, புதியதாக இயக்கங்களின் பெயர்களைக் கூறியும் சிமி இயக்க பெயர்களைக் கூறியும் பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஃபாஸிஸ பயங்கரவாதிகளை ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான அதிகாரிகள் வெளியே கொண்டுவந்தனர்.
இந்திய நாடு என்பது எங்களது பாரத மாத என்று கூறிக்கொண்டு அந்த பாரத மாதவின் உறுப்புகளிலே குண்டு வைத்துவிட்டு, அதற்கான உண்மையான குற்றவாளிகளை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கும் முன்பே முந்தியடித்துக்கொண்டு முஸ்லிம்களை மீது பழி சுமத்துவது தான் பாஸிஸ சங்கப்பரிவார கும்பலில் உண்மை முகாம். இன்று வரை சிறையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் விசாரணை கைதிகள் என்பதும், விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் போதிய ஆதரமில்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படவில்லை மாறாக அப்பாவிகள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டு மக்களின் மீது குண்டுவெடிப்பு நடத்திவிட்டு சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர் சங்பரிவார கும்பல்கள்.
இவர்கள் இந்த வரிசையில் வந்தவன் தான் போட்டோவில் உள்ள 22 வயதான குமார் சின்ஹே என்பவன். இஞ்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாத காரணத்தால் மிரட்டி பணம் வாங்கும் வேலையில் ஈடுபட்டான்.
இதற்கான இவன் பயன்படுத்தியது முஸ்லிம்களை தான். போபால் சிவாஜி நகரில் உள்ள மகேஷ் என்பவரருக்கு ஒரு மிரட்டல் கடிதம் இவன் எழுதியுள்ளான். அதில் தனது பெயர் அப்துல் பாசித் அஹமது எனவும், தான் சிமி அமைப்பை சேர்ந்தவன் எனவும், தனக்கு 15 லட்சம் தரவேண்டும் எனவும் இல்லையேல் எங்களது அமைப்பு உன்னுடைய குடும்பத்தை சும்மா விடாது என்று மிரட்டல் கடிதம் எழுது விட்டு அயோத்தி நகரில் உள்ள தனது முஸ்லிம் நண்பன் வீட்டில் சென்று தங்கிவிட்டான். இவன் தொலைபேசியிலும் மிரட்டல் விடுத்துள்ளான். மிக முக்கியமான பிரச்சனை என்பதால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கயவனை கைது செய்துள்ளனர்.

காவல்துறை மட்டும் துரிதமாக செயல்படவில்லை என்றால் இதனை காரணம் காட்டி சங்கப்பரிவார கும்பல்கள் கலவரத்தை நிகழ்த்தி பல முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தியும், முஸ்லிம்களையும் கொலை செய்தும் இருப்பார்கள்.

(தவறு செய்கிறவங்களுக்கு முன்ஜாமீன் எந்த தவறும் செய்யாத  முஸ்லிம்களுக்கு சிறையா? சிறகு அடிக்க வேண்டிய நாங்கள் சிறை, சிந்திக்க அறிவு இல்லாத மனிதர்களால், வானளவு உயரநினைத்தோம் வாழ்வுக்காக போராடுகிறோம், மனிதா ஒரு நிமிடம் எங்கள் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் (முஸ்லிம்கள்) உங்களின் சுய நலத்திற்காக சிறை ).

No comments: