Dec 27, 2012

எங்களை உயிரோடு வாழ விடுங்கள்! கதறும் மக்கள்!

Dec 28: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 500-வது நாளை எட்டியுள்ளது.
 
இது குறித்து மக்கள் தலைவர் உதயகுமார் கூறுகையில்  ‘’கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் இன்றுடன் 500-வது நாளை எட்டியுள்ளது. நாங்கள் இந்திய ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.
 
உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாங்கள் 500 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த அரசாங்கம் எங்களது உரிமைகளை பரிசீலிக்கவில்லை. நாங்கள் அறிவியல் பூர்வமாக கேட்ட கேள்விகளுக்கு எந்தவித பதிலும் தரப்படவில்லை.
 
மத்திய அரசு ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயன்பாடாக செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனத்தின் நலனுக்காக இந்திய நாட்டின் நலன்களை அடகும், காவும் கொடுத்து விட்டது. டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராடியவர்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் கூறவில்லை.
 
காங்கிரஸ் கட்சி பணத்திற்கும், முதலாளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்நிய முதலீடு ஒப்பந்தம் செய்ததிலும் கூட நாட்டின் நலன்களை அடகு வைத்து விட்டது. இங்குள்ள காவல்துறை, ராணுவத்தினரை தங்களின் நலனுக்காக பயன்படுத்துகிறது.
அந்நிய முதலீடுக்கு எதிராக செயல்பட இருந்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியினரை இந்திய புலனாய்வு துறையை பயன்படுத்தி மிரட்டி அடிபணிய வைத்தனர்.
 
அணுசக்தி ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக ஜனநாயக விரோத நடவடிக்கையை பயன்படுத்தி அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். இப்படிப்பட்ட அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே இந்த மக்கள் விரோத அரசை கலைத்து விட்டு நாட்டின் தேர்தலை நடத்தி இந்திய மக்களை காத்திட வேண்டும்’’ என்று கூறினார்.
 
சிந்திக்கவும்: பாவம் இந்திய மக்கள், எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு நாட்டில் மக்களின் நலன்களை பற்றி கவலைப்படாமல் பணக்காரர்களின் நலன்களை பற்றி அக்கறைப்படும் ஆட்சியாளர்களின் பிடிகளில் சிக்கி உயிர்வாழ தினம் தினம் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த ஆட்சியாளர்கள் மக்களுக்காக எதையும் செய்யவேண்டாம் அந்த மக்கள் உயிர்வாழ தேவைப்படும், அவர்கள் நம்பி இருக்கும் வளங்களை அழிக்காமல், பறிக்காமல் இருந்தால் சரி. கூடங்குளம் மக்களோ, சத்திஸ்கர் பழங்குடி மக்களோ சரி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான இந்திய கிராம மற்றும் விவசாய மக்கள் இந்த பயங்கரவாத ஆட்சியாளர்களிடம் கேட்பது ஒன்றைத்தான் எங்களை உயிரோடு வாழவிடுங்கள்.

3 comments:

Anonymous said...

கூடங்குளம் மக்களோ, சத்திஸ்கர் பழங்குடி மக்களோ சரி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான இந்திய கிராம மற்றும் விவசாய மக்கள் இந்த பயங்கரவாத ஆட்சியாளர்களிடம் கேட்பது ஒன்றைத்தான் எங்களை உயிரோடு வாழவிடுங்கள். Nalla varigal

Anonymous said...

கூடங்குளம் மக்களோ, சத்திஸ்கர் பழங்குடி மக்களோ சரி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான இந்திய கிராம மற்றும் விவசாய மக்கள் இந்த பயங்கரவாத ஆட்சியாளர்களிடம் கேட்பது ஒன்றைத்தான் எங்களை உயிரோடு வாழவிடுங்கள். Nalla varigal

தமிழ் காமெடி உலகம் said...

இப்போது நம் நாட்டில் ஹிட்லர் ஆட்சியை விட மிக கொடூரமான ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.....இதை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடக்கவில்லை என்றால் அது மக்கள் உயிர்களையே அழித்துவிடும் நிலை தான் வரும்......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/