Dec 3, 2012

டாக்டர் ராமதாஸுக்கு நெத்தியடி!


Dec 04: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க.,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் இயக்க தமிழர் பேரவை, திராவிடர் கழக துணை தலைவர், செயலவை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கி.வீரமணி கூறியதாவது வன்கொடுமை சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும். இந்த சட்டம் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஜாதிகள் அகல காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். காதலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி உலக காதலர் தினமானது இனிமேல் ஜாதி ஒழிப்பு காதல் ஊக்குவிப்பு நாளாக கொண்டாடப்படும்.

தர்மபுரி, கடலூரில் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது கண்டனத்துக் குரியது. வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். புது வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு வருகிற 9-ந்தேதி தர்மபுரியில் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 
குறிப்பு: சில தினங்களுக்கு முன்புதான் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்கள் கலப்பு திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது. அதன் மூலமாக தமிழ்தேசியம் உருவாகாது என்று அழுத்தம் திருத்தமாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

Seeni said...

athu sari!

Anand said...

மீண்டும் ஆராயாமல் எழுதியுள்ளீர்கள்:
//கடலூரில் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது

உண்மை செய்தி:
நெய்வேலி அருகே மாணவியை கேலி செய்ததால் 2 பிரிவினர் பயங்கர மோதல்: வீடுகளுக்கு தீவைப்பு
http://www.maalaimalar.com/2012/11/27121745/fight-two-side-people-for-chea.html

arasan said...

ஜாதி ஒழிப்புக்கு குரல் கொடுக்கும் இன்றைய தலைவர்கள் தங்களின் கையில் அதிகாரம் இருக்கும்போது ஏன் ஊக்குவித்தார்கள், அன்றே சாதிகளை ஒழிக்க பெரும் குரல் கொடுத்திருக்கலாம் ..

PUTHIYATHENRAL said...

//கடலூரில் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது//
வணக்கம் ஆனந்தன் நலமா இந்த அறிக்கையை கொடுத்தது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள்தான்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் அரசன் சரியாக சொன்னீர்கள் தாங்கள் ஆட்சியை பிடிக்கும்வரை ஜாதி சண்டையை தூண்டி விடுவார்கள், மத கலவரங்களை நடத்துவார்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். தங்கள் ஆட்சியில் எந்த பிரச்சனையும் நடக்க கூடாது. இதைதான் ஆண்டாண்டுகாலம் ஒட்டு பொருக்கி அரசியல் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

பொற்கோ said...

தமிழ் தேசியம் உருவாகுதோ இல்லையோ , கண்டிப்பாக சாதி ஒழிந்தே ஆக வேண்டும்.சக மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக நினைக்கும் அருவருக்கத்தக்க நிலை மாற்றப்பட்டே ஆக வேண்டும்.

tech news in tamil said...

சாதிகள் நிச்சியமாக ஒழிக்க வேண்டிய நோய்...