Oct 26, 2012

கொடிக்கு கொடுக்கும் மரியாதை கூட தமிழனுக்கு இல்லை!


Oct 27: தேசியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கிவிடவேண்டும். கொடியை இறக்கும் பொழுது, மெதுவாக தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ கூடாது.

ஆனால் சுதந்திர தின பொன்விழா, வெள்ளிவிழா போன்ற நிகழ்சிகளில் பறக்க விட அனுமதி உண்டு. தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் போது முதல் வரிசையில் வலது புறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்..

வேறு கொடிகள் முன்வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும். சாயம் போன தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது. முக்கியஸ்தர்களுக்கு மரியாதை அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்கூடாது.

சிந்திக்கவும்:  உயிரில்லாத துணியிலான ஒரு கொடிக்கு கொடுக்கும் மரியாதையை கூட உயிருள்ள தமிழனுக்கு கொடுப்பதில்லை நமது இந்திய அரசு. இந்த கொடியினால் உருவாகும் தேசபக்தி இந்த தேசபக்திக்கு விலை ஈழத்திலே படுகொலை செய்யப்பட்ட இலச்சக்கணக்கான உயிர்கள்.

தேசபாதுகாப்பு என்று சொல்லி ஆயுதங்களில் பல்லாயிரம் கோடிரூபாய்கள் முடக்கப்பட்டு அவை துருபிடித்து போகின்றன. மனிதர்கள் வாழ்வதற்குத்தான் நாடும், சட்டங்களும் ஆனால் இங்கே மனிதர்களை கொன்று வேற்று தேசியமும், தேசபக்தியையும் வைத்து என்ன செய்ய?

காவிரியில் இருந்து நமக்கு தண்ணீர் கிடையாது, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும்போது நமது கடல்படையால் நமக்கு பாதுகாப்பு கிடையாது, கொடிக்கு கொடுக்கும் மரியாதை கூட தமிழ் இனத்திற்கு இல்லையா?
ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...

3 comments:

Unknown said...



பதவிசுகம் கண்டவர்கள் பாவப்பட்ட
ஏழைகளை எங்கே கவனிக்கப் போகிறார்கள்!

Seeni said...

valiyaana varikal..

Unknown said...
This comment has been removed by the author.