.jpg)
தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தார் விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் இது குறித்து கேள்வி எழுப்ப நிருபர் ஒருவரை பார்த்து கோபமடைந்து ‘போய்யா போய்..ய்யா’ என்று கடுப்பாக மிரட்டினார்.
பின்னர் மைக்குகளை நீட்டிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் வந்த அவர், நாட்டுல எவ்ளோ பிரச்சனைகள் இருக்கு மின்வெட்டை பத்தி பேசலாம், டெங்குவை பத்தி பேசலாம் அதைவிட்டுவிட்டு என்று கடுப்பானவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர் பத்திரிகையாளர்கள். இதில் ஆவேசமடைந்த விஜயகாந்த், “போய் ஜெயலலிதாவை கேளுங்க நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.
அப்போது முதலில் கேள்விகேட்ட பத்திரிகையாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார். மேலும் இரண்டு தே.மு.தி.க எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறார்களாமே? என்று ஆரம்பித்தார், இதை கேட்டு ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் “போடா..போடா நாயே.. எங்கிட்ட கேள்வி கேட்கத்தான் உனக்கு உன் பத்திரிகைல சம்பளம் தராங்களா? இல்ல உனக்கு பதில் சொல்ல எனக்குத்தான் சம்பளம் தராங்களா? ஜெயலலிதாகிட்ட போயி இந்த கேள்வியெல்லாம் கேள்டா’ என்றார்.
சிந்திக்கவும்: ஒருசாதாரண கேள்வியை தாங்கி கொள்ள முடியாமல் உணர்ச்சி வசப்படும் இவர் கையில் அதிகாரம் போனால்? என்று கேட்க தோன்றினாலும், இப்படி ஒரு வார்த்தையை உதிர்த்த வியகாந்த் வாயில் சீனியைதான் போடணும் என்று சொல்லி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
எழுதவேண்டிய மக்கள் பிரச்சனைகள் எத்தனயோ இருக்க, வியாபார நோக்கத்தில் நடிகைகளின் அந்தரங்கங்கள் பற்றி ஆபாசமாக கிசுகிசு எழுதி, உண்மைகளை மறைத்து, பணத்தை வாங்கிகொண்டு செய்திகளை வெளியிடும் இவர்களுக்கு கேப்டன் கொடுத்த செருப்படி சரிதான்.
6 comments:
unmathaan....
nalla pakirvu...
their motive was just to provoke vijayakanth and get some words from his mouth.
எழுதவேண்டிய மக்கள் பிரச்சனைகள் எத்தனயோ இருக்க, வியாபார நோக்கத்தில் நடிகைகளின் அந்தரங்கங்கள் பற்றி ஆபாசமாக கிசுகிசு எழுதி, உண்மைகளை மறைத்து, பணத்தை வாங்கிகொண்டு செய்திகளை வெளியிடும் இவர்களுக்கு கேப்டன் கொடுத்த செருப்படி சரிதான்.
நல்ல (லா) கேள்வி கேட்டார்...
பொறுப்பற்ற பத்திரிகை நிருபர்களுக்கு விஜயகாந்த் கொடுத்த பதில் சரியானதே.
Captain lollu thanga mudiyalappa
Post a Comment