Nov 10, 2011

மறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை!

NOV11,அஹ்மதாபாத்: குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை எண்ணிகையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலை குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் அரங்கேறியது.

குஜராத் இனப்படுகொலையின் போது பயிற்சி எடுத்த ஆர்.எ.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள்  முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புகுந்து முஸ்லிம் ஆண்களை தாக்கி உறுப்புக்களை சேதப்படுத்தி, உயிரோடு தீயிட்டு கொழுத்தினர். பெண்களையும், சிறுமிகளையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய பிறகு தீயிட்டு கொழுத்தினர். கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிரித்தனர்.

கொடிய காட்டு மிருகங்கள்  கூட இந்த செயலை கண்டால் வெட்கம் அடையும் அளவிற்கு கொடூரங்களை புரிந்தது மோடிதலமையிலான பயிற்சி எடுக்கப்பட்ட, சிறந்த உளவுத்துறையை தன்னகத்தே கொண்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இதற்க்கு காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறையில் உள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகளும் உடந்தையாக இருந்து செயல்பட்டார்கள். அதுமட்டும் அல்ல மோடி ஒரு ராணுவ கமாண்டர் போல் இந்த கலவரத்தை நடத்த ஆணைகள் பிரபித்தான். மோடியின் அவையில் உள்ள அமைச்சர்கள் காவல்துறை கண்ரோல் ரூம்களில் உள்ள வயர்லஸ் கருவிகளை பயன்படுத்தி ஆணைகளை பிறபித்தார்கள் அந்த அளவுக்கு அரசு துறை இயந்திரங்கள் மோடிக்கு சலாம் போட்டன.

குல்பர்க் சொசைட்டி கூட்டு படுகொலை: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை.  இந்து மதவெறிக் கும்பல் இப்படுகொலைகளை எவ்வளவு கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தியது என்பதற்கு, குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முக்கியமான  சாட்சியமாக உள்ளது. இந்து மதவெறிக் கும்பல் இக்குடியிருப்பைச் சுற்றி வளைத்துத் தாக்கியபொழுது, அங்கு வசித்து வந்த இஹ்ஸான் ஜாஃப்ரி (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்), அக்காலனியில் வசித்து வரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், தங்களது உயிர்களைக் காக்குமாறும் மோடியையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப, பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியிருக்கிறார். 

அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.  இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல்.  ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முஸ்லிம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.  இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது.

ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: குஜராத் இனப் படுகொலையின் போது நடந்ததுதான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை. ஸர்தார்புராவில் உள்ள வீடுகளை சங்க்பரிவார பாசிச பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தி எரித்து சாம்பலாக்கினர். சொத்துக்களை கொள்ளையடித்தனர். அருகிலிலுள்ள ஊரிலிருந்து கலவரத்திற்கு பயந்து ஸர்தார்புராவில் வீடுகளில் அபயம் தேடிய அப்பாவி முஸ்லிம்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக வீட்டிற்கு தீவைத்து எரித்துக் கொலைச் செய்தனர்.

சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். ஹிந்து மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பும் எண்ணில் அடங்காதவை.

பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இதை கூறினார். சாய்ரா பானு என்ற ஒரு பெண் இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் கூரியதாவது  ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்  தனது உறவினர் ஒருவரின்  நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை பிளந்தது அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். அதைகண்டு ஆனந்தம் கொண்டு சிரித்தனர்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு: ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வதோரா நகரில் பெஸ்ட் பேக்கரி என்ற கடையை தீவைத்து எரித்தனர். பெஸ்ட் பேக்கரி எரிப்பு ஒரு விசித்திரமானது. அந்த பேக்கரியை நடத்தி வந்த முஸ்லிம் ஒருவர் ஆர். எஸ். எஸ். காரர்களுடனும் அவர்களது ஏரியா தலைவர்களுடனும்  நெருங்கிய நட்பு கொண்டிரிந்தவர். அதுமட்டுமல்லாது இவர்கள் நடத்தும் நிகழ்சிகளுக்கு நன்கொடைகளை அள்ளி வீசியவர். கலவரம் நடக்கும்போது அந்த பேக்கரியின் உரிமையாளர் அந்த பகுதியை விட்டு வெளியேற ஆயத்தம் ஆகுகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வந்து சொல்கிறார்கள் நீங்கள் போகவேண்டாம் உங்களுக்கு எந்தபிரச்சனையும் இல்லை நீங்கள் எங்கள் ஆள் என்று சொல்லி அவரையும் பேக்கரியில் வேலை செய்பவர்களையும் இருக்க சொல்லிவிட்டு இரவில் கூட்டமாக வந்து இவர்கள் 19 பேரை உள்ளே வைத்து பூட்டி  உயிரோடு எரிந்து சாம்பலாக்கினர் துரோகிகள்.

இந்த கலவரத்தின் அனைத்து வழக்குகளிலும் சம்மந்த பட்ட முக்கிய குற்றவாளியான மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.யின் முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு தப்ப வைக்கப்பட்டுள்ளனர். பாபர் மசூதி வழக்கில், “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என ஆர்.எஸ்.எஸ். இன் கொள்கையையே தீர்ப்பாக உயர்நீதிமன்றம் அளித்தது முதல் மோடி தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பல தீர்ப்புகள்  வரையில் நீதி துறை ஹிந்துதுவாவின் கைகளில் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.  அந்த கலவரங்களில் சம்மந்தப்பட்ட பெருவாரியான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தப்பவைக்கப்பட்ட இந்நிலையில் ஒரு சம்பவத்திற்கு மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மையில்  பாராட்டுதலுக்கு உரியதே.
நட்புடன்: புதியதென்றல்.

35 comments:

dondu(#11168674346665545885) said...

//இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர்//
முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறீரே. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கோர்ட்டால் 11 பேருக்கு தூக்கு தண்டனை பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதே, அவர்கள் எல்லோருமே இசுலாமிய கிரிமினல்கள்தானே.

டோண்டு ராகவன்

VANJOOR said...

Click the links and see videos

1.
உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.


2.
ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை .அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"


3.
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில்.


4.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!



.

VANJOOR said...

PART 1.



முஸ்லிம்கள்மீது படுகொலை தாக்குதல்: முதல்வர் நரேந்திரமோடி குற்றவாளியே!


உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

அகமதாபாத், அக்.23- 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது.

ரகசிய ஆவணம்

அந்த அறிக்கை இன்னமும் ரகசிய ஆவண மாகத்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்றாலும், 1200 பேருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்ட 2002 ஆம் ஆண்டு வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்து தகுந்த குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவுடன் அமிகஸ் குரியா வழக்கறிஞரின் அறிக்கையின் தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன.

நரேந்திர மோடி மீது எந்த வழக்கும் தொடர முடியாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்து இருந்த கருத்தை வழக்குரைஞரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள பலமாக மறுக்கிறது என்று அகமதாபாத்தில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் பிரபல ஓர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவிக்கின்றன.

இந்துக்கள் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி அறிவுரைகள் அளித்த கூட்டத்தில் கலந்து கொண்ட சஞ்சீவ் பட் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப் பட்டால்தான், முதல்வர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்று தீர்மானிக்க முடியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம்கள் தாக்கப் பட்ட நேரத்தில் அகமதாபாத் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் இரண்டு அமைச்சர்கள் இருந்தனர் என்ற உண்மையே சஞ்ஜிவ் பட்டின் கூற்று உண்மையாக இருக்கலாம் என்று கருதச் செய்கிறது என்று அறிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலமைச்சர்மீது குற்றச் சாற்று

விசாரணை நீதி மன்றம் ராமச்சந்திரனின் கருத்தினை ஏற்றுக் கொண்டால், இந்திய குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் முதல் அமைச்சர் மீது குற்றச் சாற்று பதிவு செய்யும் நிலை ஏற் பட்டுவிடும்.

அவற்றில் 153-ஏ (சமூகங்களிடையே விரோதத்தை வளர்க்கும் அறிக்கை களை வெளியிடுதல்), 153-பி (தேசிய ஒருமைப் பாட்டுக்குக் எதிரான கருத்துகள் தெரிவித்தல்), 505 (பொதுமக்களிடையே கலவரம் விளை விக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்) 166 (தீங்கு விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பொது ஊழியர் சட்டத்திற்குக் கீழ்படியாமல் செயல்படுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்படலாம்.

ஒரு பொது ஊழியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் தெரிவிப்பதையும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் கீழ்ப்படிய மறுத்து செயல்படுவதன் மூலம் தீங்கு விளையும் என்பதையும் நன்கு அறிந் திருக்கும் ஒரு பொது ஊழியர் செய்தால், ஓராண்டு வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று பிரிவு 166 தெரிவிக்கிறது.

தலைமை நிருவாக அதிகாரியாக இருந்த நரேந்திர மோடிக்கு மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களை அடக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருந்தன.


CONTINUED BELOW……..

VANJOOR said...

CONTINUED BELOW……..

PART 2.

முஸ்லிம்கள்மீது படுகொலை தாக்குதல்: முதல்வர் நரேந்திரமோடி குற்றவாளியே!

உச்சநீதிமன்றம் நியமித்தக் குழு

மோடியின் மீதும் மற்றும் 61 பேர் மீதும் திருமதி ஜாஃப்ரி அளித்த புகாரின் மீது விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இந்த சிறப்பு விசாரணைக் குழுவை நிய மித்தது. அந்த குழு சாட்சிகளிடம் விசாரணை செய்து அளித்த அறிக்கையை தனிப் பட்ட முறையில் பரிசீலனை செய்து மதிப்பீடு செய்யும்படி உச்ச நீதிமன்றம் அமிகஸ் குரியா வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது.

முதல்வர் மீதான குற்றச்சாற்றுக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கும் காவல்துறை அதிகாரி சஞ்ஜிப் பட் முரண்பாடு கொண்ட, நம்பத்தகாத சாட்சி என்பதால், மோடியின் மீதான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்த இரண்டு அமைச்சர்களும் காவல்துறையின் செயல்பாடுகளில் குறுக்கிட்டதற்கான ஆதாரமாக ஆவணங்கள் ஏதும் கிடைக்க வில்லை என்றும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

மோடி காவல் துறைக்கிட்ட உத்தரவு

27.2.2002 அன்று நடைபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள இந்துக்களை அனுமதிக்கும்படி மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை அளித்தார் என்று சிறப்பு விசாரணைக் குழு முன் சஞ்ஜிவ் பட் சாட்யிம் அளித்திருந்தார்.

காந்திநகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அன்று பின்மாலைப் பொழுதில் இந்த கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அதிகாரிகள் எவரும் சஞ்ஜீவ் பட் அக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கவில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவுகளை அமிகஸ் குரியா வழக்குரைஞர் ஏற்றுக் கொள்ள வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்சியம் எடைபோட்டுப் பார்க்கப்படவேண்டுமேயன்றி, எண்ணப்படக் கூடாது என்றும், சஞ்ஜீவ் பட்டிடமும் முதல்வர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்தால் அன்றி இது நிகழாது என்றும் வழக்குரைஞர் விவாதிக்கிறார்.

மற்ற அதிகாரிகளை பாதிக்கப்பட்ட நபர்கள் கேள்வி கேட்டு தீவிரமாக குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காமல் இந்த நிலையில் வழக்கை முடித்துக் கொள்வது சரியானதாகவும், முறையானதாகவும் இருக்காது என்று அமிகஸ் குரியா வழக்குரைஞர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. பட் பொய் சொன்னார் என்பது அப்போது வெளிப்படலாம்; அதே போல் மற்ற காவல்துறை அதிகாரிகள் பொய் சொல்லினர் என்பதும் வெளிப் படலாம்.

இரண்டு அமைச்சர்கள் தொடர்பு

உள்துறையுடன் தொடர்பு இல்லாத இரண்டு அமைச்சர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தனர் என்பதே சஞ்ஜிவ் பட்டின் சாட்சியம் உண்மையானது என்பதைக் காட்டக்கூடும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு அமைச்சர்களும் முதல்வரின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்கள் என்பதை சிறப்பு விசாரணைக் குழுவே முன்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

அமிகஸ் குரியா வழக்குரைஞரின் கருத்தை சிறப்பு விசாரணைக் குழு நிராகரித்தால், திருமதி ஜாஃப்ரியும் அவருடன் இணைந்த மனுதாரார்களும் இதனை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். சிறப்பு விசாரணைக் குழுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், விசாரணை நீதிமன்றம் சொந்தமாக, சுதந்திரமான முறையில் அமிகஸ் குரியா வழக்குரைஞரின் கருத்தைப் பற்றி பரிசீலனை செய்து முடிவெடுக்கலாம்.

- (நன்றி: தி இந்து 23-10-2011 தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)

PUTHIYATHENRAL said...

வணக்கம் டோண்டு ராகவன் அவர்களே, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கோத்ரா ரயில் எரிப்பு என்பதில் பல்வேறு பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

அதில் ஒரு தெளிவில்லாத நிலையே உள்ளது. அதுமட்டும் அல்ல கோத்ரா ரயில் எரிப்பை நடத்தியது முஸ்லிம்கள் இல்லை என்பதே எனது கருத்தும் கூட. ஆட்சியில் இருந்த மோடி அரசு ஒரு விபத்தை முஸ்லிம்கள் செய்ததாக திட்ட மிட்டு திசை திருப்பியது என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஒரு மாநிலம் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவர், பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முகமூடியான பாரதிய ஜனதாவின் மாநில முதல்வர் என்று ஆர்.எஸ்.எஸ். கொலுவீற்றிருக்கும் ஒரு மாநிலத்தில் முஸ்லிம்கள் இப்படி ஒரு காரியத்தை செய்வது தற்கொலைக்கு சமம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை அப்படி இருக்க இப்படி ஒரு வேலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து. அது மட்டும் இல்லாமல் குஜராத் முஸ்லிம்கள் மோடியின் ஆட்சியை கண்டு அஞ்சி நடுங்கி வாழ்ந்து வந்தார்கள் என்பதே உண்மை. மேலும் கமிசன், மற்றும் சாட்சிகள் பெரும்பான்மைகள் வேறு மாதிரி சொல்ல உளவுத்துறையின் கண்டுபிடிப்பே இது.

உங்களுக்கு தெரியும் இந்திய உளவுத்துறையில் எப்படி ஹிந்துத்துவா ஊடுருவி இருக்கிறது என்று அவர்கள் முஸ்லிம்களின் மீது எப்படி பொய்யாக வழக்குகளை பதிவதில் குறியா இருப்பவர்கள் என்பதும் நடுநிலையாளர்கள் அறிந்த உண்மை. அது மட்டும் மல்லது மோடி ஆட்சி செய்கிறார் என்கும்போது கேட்கேவே தேவையில்லை என்ன நடந்திருக்கும் என்று. மற்றபடி மற்றபடி முழு பூசணிகாயை சோற்றில் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சிந்திக்கவும் நியத்தின் குரலாக எப்போதும் நிற்கும்.

செய்தி ஒன்று: கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் எரித்து கொல்லப்பட்டனர்.நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம். முதலில் இந்த வழக்கை திட்டமிடாத தாக்குதலாக போலீசார் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்தனர். 2005ம் ஆண்டு ரயில்வே அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கமிஷன் "இது ஒரு விபத்து' என, அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இதை முஸ்லிம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு செய்ததாக கூறியது.

இது குறித்த தீர்ப்பின்போது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று ஒருதரப்பினரும். திட்டமிட்ட சதி என்று மற்றொரு தரப்பினரும் கூறிவந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மெளல்வி உமரை போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. சபர்மதி எக்ஸ்பிரஸில் கரசேவகர்கள் இருந்த எஸ்-6 பெட்டியை எரிக்குமாறு ஒரு கும்பலுக்கு உமர் உத்தரவிட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டியிருந்தது.

PUTHIYATHENRAL said...

செய்தி 2: குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனது. அதை "கோத்ராவைச் சேர்ந்த முசுலீம்களில் சிலர் 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து S6 பெட்டிக்குள் ஊற்றி, அதற்குத் தீ வைத்தனர்'' என்பதுதான் இச்சம்பவம் பற்றி குஜராத் புலனாய்வு துறை கண்டுபிடித்தது.

இக்கண்டுபிடிப்பை குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, "தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது அறிக்கை, "ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி" எனக் குறிப்பிட்டது.


இதுவொருபுறமிருக்க, "முசுலீகளில் சிலர் பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், "தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இதன் காரணமாக புலனாய்வு துறையின் இந்த வாதம் உண்மை இல்லை என்று ஆகி போனது. "S6 மற்றும் S7 பெட்டிகளை இணைக்கும் இணைப்பை கிழித்துவிட்டு, S6 பெட்டிக்குள் நுழைந்த முஸ்லிம்களில் சிலர் திரவ எரிபொருளை கீழே கொட்டிவிட்டு, அதன்பின் வெளியே இறங்கிப் போய் தீ வைத்ததாக" இரண்டாவது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இதற்கு ஏற்றாற்போல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய முதல் தகவல் அறிக்கையும் திருத்தப்பட்டது.

கோத்ரா சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் கே.ஜி.ஷா நானாவதி கமிசன் முன்பு சாட்சியம் அளித்துள்ள பூபத் பாய் என்ற பயணி, "வெளியில் இருந்து எவரும் ரயில் பெட்டிக்குள் ஏறியதை நான் பார்க்கவில்லை" எனக் கூறியுள்ளார். துவாரகா பாய் என்ற பயணி, "நான் தப்பித்து வெளியேறும்வரை... எத்தகைய திரவப் பொருளும் உள்ளே வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. யாரும் எந்த நபரும் எத்தகைய திரவத்தையும் தெளிப்பதையோ அல்லது பெட்டியைக் கொளுத்துவதையோ நான் பார்க்கவில்லை" எனச் சாட்சியம் அளித்துள்ளார். டி.என். திவிவேதி என்ற பயணி, பெட்டியின் இடதுபுற மேல்பாகத்தில் இருந்துதான் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

PUTHIYATHENRAL said...

செய்தி 3: S6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது அறிக்கையில், "அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.

பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், "S6 மற்றும் S7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, "நியோபிரீன் ரப்பர்" என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்" எனச் சான்று அளித்துள்ளனர்.

முசுலீம்கள் பெட்டிக்கு வெளியில் இருந்தோ, அல்லது பெட்டிக்குள் நுழைந்தோ பெட்ரோல் கொட்டியிருந்தால் உடனடியாக தீப்பற்றியிருக்கும். ஆனால், நானாவதி ஷா கமிசனிலும், பானர்ஜி கமிசனிலும், சாட்சியம் அளித்துள்ள பயணிகள், "முதலில் மூச்சு முட்டும் அளவிற்குக் கரும்புகை வந்தது; அதன்பின் சில நிமிடங்கள் கழித்துதான் நெருப்பு எரிந்ததாக"ச் சாட்சியம் அளித்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று S6 பெட்டியில் பயணம் செய்தவர்களுள் பெரும்பாலானோர் குஜராத் மாநில விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள்தான். இது, பயணிகள் முதன்பதிவு பட்டியலின் மூலமும், முன்பதிவு செய்து S6 பெட்டியில் பயணம் செய்த 52 பயணிகளில் 41 பேர் உயிர் பிழைத்திருப்பதை வைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

S6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், "எவ்வித எதிர்ப்பும் இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், S6 பெட்டி தீக்கிரையானதை, "ஒரு தற்செயலான தீ விபத்துதான்" என முடிவு செய்து, அறிக்கையை அளித்திருக்கிறது.

PUTHIYATHENRAL said...

செய்தி 4: இச்சம்பவம் நடந்த சமயத்தில் குஜராத் மாநில போலீசுத் துறையின் உளவுப் பிரிவில் கூடுதல் போலீசு இயக்குநராகப் பணி புரிந்து வந்த சிறீகுமார், நானாவதி ஷா கமிசனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், கோத்ரா தீ விபத்திற்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்புலம்தான் காரணமாக இருக்கும் என்பதை 'நிரூபிக்கும்' வகையிலேயே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என மத்தியமாநில அரசுகளிடமிருந்தும், மோடிக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்தும் நெருக்குதல் வந்ததாக"க் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத், நானாவதி கமிசனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், S6 பெட்டியை எரிக்க எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை. குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் நளின் பட், "எளிதில் பற்றக்கூடிய பொருள் எதுவும் S6 பெட்டிக்குள் வெளியில் இருந்து வீசப்பட்டதற்கான தகவல் எதுவும் தங்களின் சாட்சிகளிடம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

PUTHIYATHENRAL said...

செய்தி 5: கோத்ரா சம்பவம் தொடர்பாக உள்ளூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி, 6 தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தது, விசுவ இந்து பரிசத். இது தொடர்பாக நானாவதி கமிசனில் நடந்த குறுக்கு விசாரணையில், ஒரு தொலைபேசி எண் சூரத்தைச் சேர்ந்த கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு உரிமையானது; மற்ற ஐந்து தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லாதவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோத்ரா வழக்கில் 54ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இஷாக் முகம்மது பார்வையற்றவர். "இஷாக் முகம்மது 100 சதவீதம் பார்வையற்றவர்" என 1997ஆம் ஆண்டே குஜராத் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.

PUTHIYATHENRAL said...

செய்தி 7: சலீம் அப்துல் கலாம் பதாம் உள்ளிட்டு ஐந்து குற்றவாளிகள் கோத்ராவைச் சேர்ந்த திலீப் உஜ்ஜம்பாய் தசரியா என்ற பள்ளி ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தப் பள்ளி ஆசிரியரோ, தான் அப்படிப்பட்ட எந்த சாட்சியமும் அளிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று, கோத்ராவில் இருந்து 25 கி.மீ. தள்ளியுள்ள ஊரில் தனது பள்ளியில் இருந்ததாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறார்.

முகம்மது அன்சார் குத்புதீன் அன்சாரி, பைதுல்லா காதர் தெலீ, ஃபெரோஸ்கான் குல்சார்கான் பத்தான், இஷாக் யூசூப் லுஹர் உள்ளிட்ட 20 பேர் மீது, கோத்ரா சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லாமலேயே, அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பிப். 27, 2002 அன்று காலை 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் மீதான புகார் பதிவு செய்யப்பட்டது.

PUTHIYATHENRAL said...

செய்தி 08: கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், S6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். "நீலம் தங்கும் விடுதி வழக்கு" என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

PUTHIYATHENRAL said...

செய்தி 09: கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, RSS தலைமை தாங்கி நடத்திய இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, "பொடா"வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள டோண்டு ராகவன் அவர்களே இதை முஸ்லிம்கள் சொல்லவில்லை அரசு நியமித்த கமிசனும், சாட்சியங்கள் ஆகிய நமது ஹிந்து சகோதரர்களும், நமது இந்துமதத்தை சேர்ந்த பெரும் சிந்தனை வாதிகளும் சொல்லியது. அது என்னை போன்ற ஒருவானின் கருத்தும் கூட. நீங்கள் தவறு இருந்தால் சுட்டி காட்டலாம். முஸ்லிம்கள் மத்தாப்பு கொளுத்தினால் கூட பாம் வைத்துவிட்டான் என்று சொல்லும் நமது தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகள் எல்லாம் இருக்க முஸ்லிம்கள் செய்தால் அது பட்டவர்த்தனமாக உடனே வெளிச்சமாகிவிடும். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. வெளிச்சம் போட்டு காட்ட ஆயிரம் ஏடுகள் இருகின்றன. ஆனால் இதில் உண்மை இல்லை என்பதாலே இதை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை அவர்களால். புரியும் என்று நம்புகிறேன். வணக்கம் நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்

VANJOOR said...

‘குஜராத் – என்ன நடக்கிறது?’

என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்,

‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர்
இந்து மதவெறியர்கள்.

பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர்.

கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல.

கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம்.

இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர்.
அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர்.

ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது

தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு,

ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.

‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன்

‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள்,

தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

“காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை.

சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்.

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர்.
நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது.


இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள்.
முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள் என்றார்.

Lengthy article shortened

________________________________________
Source : http://www.peoplesrights.in/tamil/?p=257
header:மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!

VANJOOR said...

CLICK TO READ

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை. தீர்ப்புக்கு முன்.


.

dondu(#11168674346665545885) said...

கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு குற்றத்துக்கு இசுலாமியருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் மட்டும் நொள்ளை சொல்வீர்கள். அதே நீதி மன்றம் முக்கிய குற்றவாளிக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அதை மட்டும் ஏற்றுக் கொள்வீர்கள்.

எவ்வளவு நாக்கு உங்களுக்கு?

அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.

டோண்டு ராகவன்.

Anonymous said...

Mr Dondu,
I have never read you condemning Godhra riot criminals and sympathizing Godhra riot victims.
A Chief Minister who ordered his police officers to let the Hindus vent their anger. Don't you think its immoral?
For argument sake, let some mulsims torched the coach. Being the ruler, what you should do? Rape and kill all the muslims or punish only the people who are responsible?

A muslim doesn't blame all the hindus. He wants the culprits to be punished. irrespective of their religion.
Why you think Godhra riots are a legally right response to the train carnage? Why do you think all muslims to be punished when few commit mistakes (Vanjoor bhai has listed the legal loopholes.. did you read any loopholes in Gujarat riot cases? IF yes, present them)

ungalukku eppavume naakku neelam thaan :))

Anonymous said...

//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். //

மிஸ்டர் டோண்டு ராகவன். தயவு செய்து ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை ஹிந்துக்கள் என்று வாதிடாதீர்கள். அவர்கள் ஹிந்துக்கள் என்று சொல்லிகொள்ளும் பயங்கரவாதிகள். பெரும்பான்மையான ஹிந்துக்கள் யாரும் அவர்களோடு இல்லை அவர்களுக்கு ஆதரவும் கொடுக்கவில்லை. அவர்கள் ஹிந்துக்களை காக்கிறோம் என்று ஹிந்துமததிற்கு கேடு உண்டாக்க வந்த கயவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படி தீவிரவாதிகளை பகிரங்கமாக ஆதரிக்காதீர்கள். அவர்களை ஹிந்துகளோடு சேர்க்காதீர்கள்.

by: RAJAN.

PUTHIYATHENRAL said...

//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு குற்றத்துக்கு இசுலாமியருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் மட்டும் நொள்ளை சொல்வீர்கள். அதே நீதி மன்றம் முக்கிய குற்றவாளிக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அதை மட்டும் ஏற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு நாக்கு உங்களுக்கு? அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.//

அப்படியெல்லாம் இல்லை யார் தவறு செய்தாலும் அதற்க்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து. ஒரு நாளும் அநீதிகளுக்கு துணை போக முடியாது என்பதே எமது வாதமும் கூட. எல்லாவிதமான பயங்கரவாத திற்கும் எதிராக சிந்திக்கவும் குரல் கொடுக்கும். உண்மையிலேயே ரயில் எரிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவதில் மாற்று கருத்து இல்லை. இந்தியா முழுவதும் செய்யாத குற்றத்திற்காக இஸ்லாமியர்கள் சிறையில் வாடுவதும், அவர்கள் மேல் இடப்பட்ட பொய் வழக்குகளும் ஏராளம் என்பது நீங்கள் அறியாதது இல்லை. நீங்கள் சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை மொத்தமாக ஹிந்துகளோடு சேர்த்து ஹிந்துக்கள் என்று வாதிடாதீர்கள். அவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துங்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே, மனிதர்களை உயிரோடு எரித்து கொல்பவன் மனித இனத்தின் விரோதியாகத்தான் இருப்பான். இதுவே எமது கருத்து. எல்லாவிதமான அரசு பயங்கரவாதம் முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை அனைத்தையும் சிந்திக்கவும் வன்மையாக எதிர்க்கும் என்பதை பதிவு இங்கே மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறோம். இது ஒரு சார்பு சிந்தனை படைத்தது என்று எண்ண வேண்டாம். பத்திரிகை என்பது மக்கள் பிரச்சனைகளை பாமர மக்களின் உணர்வுகளை, நியாங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம், கருத்து தினமலர், தினமணி போல் இல்லாமல் மக்களின் குரலாய் சிந்திக்கவும் ஒலிக்கும். அனைத்துவித அநீதிகளுக்கும் எதிராய் மக்களின் போர்வாளாய் சிந்திக்கவும் இருக்கும் என்பதை இங்கே ஒருமுறை சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளோம்.

நன்றி வணக்கம் : நட்புடன் சிந்திக்கவும் ஆசிரியர் குழுமம்.

PUTHIYATHENRAL said...

//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு குற்றத்துக்கு இசுலாமியருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் மட்டும் நொள்ளை சொல்வீர்கள். அதே நீதி மன்றம் முக்கிய குற்றவாளிக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அதை மட்டும் ஏற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு நாக்கு உங்களுக்கு? அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.//

அப்படியெல்லாம் இல்லை யார் தவறு செய்தாலும் அதற்க்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து. ஒரு நாளும் அநீதிகளுக்கு துணை போக முடியாது என்பதே எமது வாதமும் கூட. எல்லாவிதமான பயங்கரவாத திற்கும் எதிராக சிந்திக்கவும் குரல் கொடுக்கும். உண்மையிலேயே ரயில் எரிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவதில் மாற்று கருத்து இல்லை. இந்தியா முழுவதும் செய்யாத குற்றத்திற்காக இஸ்லாமியர்கள் சிறையில் வாடுவதும், அவர்கள் மேல் இடப்பட்ட பொய் வழக்குகளும் ஏராளம் என்பது நீங்கள் அறியாதது இல்லை. நீங்கள் சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை மொத்தமாக ஹிந்துகளோடு சேர்த்து ஹிந்துக்கள் என்று வாதிடாதீர்கள். அவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துங்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே, மனிதர்களை உயிரோடு எரித்து கொல்பவன் மனித இனத்தின் விரோதியாகத்தான் இருப்பான். இதுவே எமது கருத்து. எல்லாவிதமான அரசு பயங்கரவாதம் முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை அனைத்தையும் சிந்திக்கவும் வன்மையாக எதிர்க்கும் என்பதை இங்கே மீண்டும், மீண்டும் பதிவு செய்கிறோம். இது ஒரு சார்பு சிந்தனை படைத்தது என்று எண்ண வேண்டாம். பத்திரிகை என்பது மக்கள் பிரச்சனைகளை பாமர மக்களின் உணர்வுகளை, நியாங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம், கருத்து. தினமலர், தினமணி போல் இல்லாமல் மக்களின் குரலாய் சிந்திக்கவும் ஒலிக்கும். அனைத்துவித அநீதிகளுக்கும் எதிராய் மக்களின் போர்வாளாய் சிந்திக்கவும் இருக்கும் என்பதை இங்கே ஒருமுறை சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளோம்.

நன்றி வணக்கம் : நட்புடன் சிந்திக்கவும் ஆசிரியர் குழுமம்.

UNMAIKAL said...

//dondu(#11168674346665545885) said...

எவ்வளவு நாக்கு உங்களுக்கு?

அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.//

டோண்டு (உண்மை பெயர் ராகவன்‍ - பார்ப்பனர்) ஐயரே,

தன் சுய சொரூபத்தை காட்டிக்கோண்டு தனது பதிவுகளில் இஸ்ரேலை வானார புகழ்ந்து, நரமாமிசமுண்ணும் கொலைகார மோடியை தலைமேல் தூக்கிப்பிடித்து வைத்துக்கொண்டு அயராது ஆடும் டோண்டுவை மேலும் தெளிவாக காட்டிக்கொள்ளுகிறார் டோண்டு இங்கே.

தமிழ் பதிவர்கள், வாசகர்கள் பார்ப்பனர் "டோண்டு” க்கு எத்தனை எவ்வளவு நாக்கு? என்பதை நன்கறிவார்கள்.

டோண்டு ஐயரே, மேலும் இந்தமாதிரி “Don’t do” .

யோக்கியர்டோண்டு ஐயரை
வாசகர்கள் நன்கறிவார்கள்.

ஐயரே, கொலைகாரன் மோடியின் குஜராத் படுகொலையில் ஆயிரக்கணக்காணோர் சிதைக்கப்பட்டதற்கு நீர் ஆனந்தப்பட்டிரா இல்லையா? நீரே அறிவீர். நீரே கூறிக்கொள்ளும். .

VANJOOR said...

ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி

11 Nov 2011
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு.

கோத்ரா சம்பவத்தின் திரை மறைவில் மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிய வேளையில் தப்பி பிழைத்தவர்கள் ஸர்தார்புராவில் உள்ள இப்ராஹீம் ஷேக்கின் வீட்டில் அடைக்கலம் தேடினர்.

அபயம் தேடியவர்களை விடாது துரத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இப்ராஹீமின் வீட்டை பூட்டி உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.

உடலில் தீ பற்றிய பொழுது தப்பிக்க கூட வழிதெரியாமல் தீயில் வெந்து அந்த அப்பாவிகள் மரணித்தார்கள் என இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

கொல்லப்பட்ட33 பேர்களில் 22 பேர் பெண்களாவர். மீதமுள்ளவர்கள் குழந்தைகள். எட்டுமாதமே ஆன பச்சிளம் குழந்தையும் இந்த பாதகர்களின் கொடூரத்திற்கு பலியானது.

கொல்லப்பட்டவர்களில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர். இதனை அவர்களது உறவினரான அய்யூப் மியா ரஸூல் மியா ஷேக் வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கோத்ரா சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக ஏற்கனவே ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.

ஸர்தார்புரா சம்பவம் நிகழ்வதற்கு முந்தைய தினம் மசாலப்பொடி வாங்க தயாபாய் வனபாய் என்ற நபரின் கடைக்கு சென்ற தனது மாமாவிடம், இது இவருடைய கடைசி பஜ்ஜியை தின்பதற்கான மசாலா என கடை உரிமையாளர் இன்னொரு நபரிடம் கூறியதாக அய்யூப் டெஹல்காவிடம் தெரிவித்திருந்தார்.

இதனை போலீஸாரிடம் புகார் அளித்தபிறகும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எஸ்.ஐ.டியும் இதனை கண்டுக்கொள்ளவில்லை.

கோத்ரா சம்பவம் நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிரான என்ன செய்தாலும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள். நமது அரசு அவர்களை காப்பாற்றும் என நரன் லாலு பட்டேல் என்ற உள்ளூர் எம்.எல்.ஏ கூறியதாக ஸர்தார்புரா கூட்டுப் படுகொலையில் தனது மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்த நாஸிர் அக்பர் ஷேக் பின்னர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்

கலவரத்திற்கு முன்னோடியாக சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்கள் நெருக்கமாக வசித்த ஷேக் முஹல்லாவில் ஹாலோஜன் விளக்குகளை நிறுவிய பொழுது, இது எதற்கு? என வினவிய பொழுது “முஸ்லிம்களை கொலைச் செய்ய” என பதிலளித்ததாக பிக்குமியா ஷேக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்த போதிலும் அதனை செவிக்கொடுத்து கேட்க போலீஸ் தயாராகவில்லை.

துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த உள்ளூர் போலீஸ் பிரமுகர்கள் பலரையும் தவிர்த்துவிட்டு முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) தயார் செய்தனர் என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது.

ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த முன்னாள் பா.ஜ.க அமைச்சர் நரன் லாலு பட்டேல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவராவார். துவக்கத்தில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் வி.ஹெச்.பியின் குஜராத் மாநில செயலாளரான திலீப் திரிவேதி ஆவார். குற்றவாளிகளின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இவர் ஜாமீனுக்கு ஆதரவான முடிவை மேற்கொண்டு குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவினார்.

பின்னர் இனப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த மனுவில் உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து திலீப் திரிவேதி நீக்கப்பட்டார்.

continued..

VANJOOR said...

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர்களும் பிரபல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தலைவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க துணியவில்லை.
ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை

வழக்கிலிருந்து தப்பித்த பலரும் குற்றவாளிகளின் பெயர் விபரங்களை அளித்து நீதிமன்றத்தில் அவர்களை சரியாக அடையாளம் காண்பித்த பிறகும் அவர்கள் தப்பிவிட்டனர் என ஸர்தார்புரா கூட்டுப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒய்.பி.ஷேக் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்ததற்கு காரணம் அரசு தரப்பின் வீழ்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கான சாட்சிகளை எஸ்.ஐ.டி சாட்சிகளாக எடுத்துக்கொள்ளவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கூட்டுப் படுகொலை நிகழும்போது போலீஸார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு ஆதாரமான மொபைல் ஃபோன் அழைப்புகளையோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரியின் வாக்குமூலத்தையோ எஸ்.ஐ.டி ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது.


நேற்று ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வேளையில் நீதிமன்றத்தில் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களின் குடும்பத்தினர் யாரும் இல்லை.

அந்த கோர சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் அதன் கோர நினைவுகள் ஏற்படுத்தும் பீதியின் காரணமாக மெஹ்ஸானா மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாமல் உள்ளனர் இந்த அப்பாவி முஸ்லிம்கள்.

அருகிலுள்ள மாவட்டத்தில் ஸத்நகர் அகதிகள் முகாமில் அவர்கள் வசித்து வருகின்றார்கள்.

SOURCE : http://www.thoothuonline.com/%e0%ae%b8%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af8-2/

VANJOOR said...

****குஜராத்:இனப்படுகொலைக்கு உதவியதன் மூலம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் .*****

.

Anonymous said...

No body discussed where it is started.. i mean the godhra train burning .. Who are the main reason for it... because this incident is induced the riots later ...

Anonymous said...

//No body discussed where it is started.. i mean the godhra train burning .. Who are the main reason for it... because this incident is induced the riots later ...//


நீங்கள் சொல்லவது எல்லாம் சரிதான் கோத்ரா ரயில் எரிப்பை செய்தது யார்? அது ஒரு ஆக்சிடென்ட் என்றே நானாவதி கமிசன் சொல்கிறது. இந்திய உளவுத்துறை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மாதிரி, இஸ்ரேலின் மொசாத் மாதிரி மனித நேயம் இல்லாமல் தங்கள் சார்ந்திருக்கும் மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதும், இந்தியாவில் ஹிந்துதுவாவின் ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் முழு மூச்சாக செயல்படும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஒரு கருவிதான் இந்திய உளவுத்துறை. இதற்க்கு சிறந்த உதாரணம் இன்றுவரை உளவுத்துறை ராவில் ஒரு முஸ்லிம்கூட சேர்க்கப்படவில்லை. இதில் இருந்து தெரிகிறது இவர்கள் செய்யும் சாதிகள் வெளிவந்து விடுமோ என்கிற பயம். நடுநிலையா பேசுங்கள் நீங்கள் கொண்டிருக்கும் ஹிந்துத்துவா ஆதரவு நிலை உங்களை மனிதர்கள் என்ற லிஸ்டில் இருந்து உங்களை அப்புறபடுத்தி மிருகங்களாக மாற்றிவிட போகிறது.

Anonymous said...

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த அனைத்து கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களே காரணமாக இருந்துள்ளன. ஒரு சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தை நோக்கி கலவரம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. நெல்லி, பகல் பூர், பீவண்டி, குஜராத், மீரட், மும்பை, கோவை, மீனாட்சிபுரம், இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அத்தனை கலவரங்களையும் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவாரின் ஆயுதம் தரித்த கும்பல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் இந்தியாவில் பலபகுதிகளில் நடந்தன. பாதிரியாரையும், அவரது பிஞ்சு குழந்தைகளையும் தீவைத்து கொளுத்தியது, பாதிரி பெண்களை கற்பழித்தது, இப்படி போகிறது டோண்டு சார் இதற்க்கு என்னா சொல்றீங்கள் சார்.

by: adam.

Unknown said...

Good article thank u

Anonymous said...

ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.

வந்தே மாதரம்!

பாரத் மாதாகி ஜெய்!!

இந்து தர்மம் ஓங்குக!!!

Anonymous said...

//நீங்கள் சொல்லவது எல்லாம் சரிதான் கோத்ரா ரயில் எரிப்பை செய்தது யார்? அது ஒரு ஆக்சிடென்ட் என்றே நானாவதி கமிசன் சொல்கிறது. //

See i am a HINDU .. i am NOT saying what ever done for muslim is right... my most of the friends are muslims... my thought is this article strong talking one side of the riot.. Whoever done criminal things against opp religion should be punished without whether they are hindu or muslim... my request is don't highlight hindu killers alone... because when some muslim boy reads this topic, he will get induced in his early age... ALWAYS discuss in polite way.. Next generation of india should live peacefully ...

Anonymous said...

//See i am a HINDU ..//

It should be better if you unveil your name.

I am a Muslim. I studied in a Corporation school in Madras. It was in 1974 to 1977.

In my class most of them were Hindu friends. Only one Christian friend.

About 15 years back there was a conflict in building a Mosque (masjid) next to the school where I studied.

There were RSS and BJP members stood against for the construction of Masjid.

My beloved friends supported to build the Masjid. Do you know why?
When we were studying, my friends used to eve tease the girls and talk sometimes rubbish which was politely opposed by me. Some of them even smoked cigarettes. I used to advise them not to.

These kind of good thoughts awaken them to support to build a Masjid next to my old (gold) school.

We are still best friends. But among them one friend brainwashed to be a BJP member. But I still maintain a good relationship with all of them.

So, Islam never teaches to kill any. Except if it is threatened to your life, family or nation. Otherwise Islam always encourage to teach and live peacefully.

But our Historians overwritten differently.

Thank you
Mohamed Thameem

Anonymous said...

Hi Mohamed Thameem,

I am Ramesh. working in private software company. There is two major political party in india. One is congress another one is BJP. If BJP comes Muslims friends feels uncomfortable, I hope you know about what congress doing now. Really i am worrying about india's future and its people... I think in south india there is no such RSS, BJP impacts, since most of the people educated. They can understood the politics around the unnecessary fights.

Anonymous said...

Bro Ramesh,

We can call each other as brothers. According to Islamic thoughts we, the human being all are came from one pair of parental. I am proud to give birth in this amazing Dravidian land. And proud to be one of the member of Dravidian, Thamizhan. There is no such geographical uniqueness to any other land in the world that it is being the land of our first father Adam (peace be upon him)and his wife our first Mother Hawwa peace be with her, which is believed to be Awwai) of Tamil world.

When there was Sri Lanka before disintegrated from Tamil main land Lemuria continent from the great flood, Adam (admi) was descended from heaven to earth, that was Dravidian land now it is in Sri Lanka, still the place is called mountain of father Adam.

One of the earliest son of Adam and Hawwa was Sheed prophet (peace be upon him). Now the east coast road stretches from Madras to Kaniyakumari is called Sedu road.

Tamil land has its own demographical importance in moral and spiritual content. Let us be Tamilian and let us have prudential to point who is our friend and who is our foe ?

Mohamed Thameem

Anonymous said...

Admi = Adam
Awwai = Hawwa
Sheedu = Sedu
Tamil = Ancient language.

Nobody can say even approximately what is the age of Tamil Lanuage.

Mohamed Thameem

Moulana aalim Sheikh Mohamed said...

இந்த சம்பவத்தின் போதும் நாம் என்ன செந்துறை கொண்டு இருந்தோம்