Jun 22, 2011

காமடி பீஸு ஊழலை ஒழிக்க போகுதாம்!

JUNE 23, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தான் எப்போதும் ஆதரவு அளித்து வருவதாக தி.மு.க., தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், மாநிலத்தில் முதல்வர் பதவியையும் ஊழல் எதிர்ப்பு மசோதா வரம்பிற்குள் கொண்டு வர தி.மு.க., ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே குறித்த கேள்விக்கு பதிலளித்த கலைஞர், ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் நல்ல நடவடிக்கைகளுக்கு தான் எப்போதும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: கருணாநிதி சொல்வதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. இவரு என்ன சிரிப்பு அரசியல்வாதியா? இவர் பண்டாரமாக அரசியலுக்கு வந்தார். இப்ப ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவர் ஊழலை ஒழிக்க ஆதரவு கொடுப்பாராம். கருணாநிதியை அரசியல் சாணக்கியன் அது, இது என்று புகழ்ந்தார்கள் இப்போ பார்த்தால் காமடி பீஸு ஆகி போனார்.

No comments: