May 26, 2011

சுபா. முத்துக்குமார் படுகொலை சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!

May 27, தமிழக காவல்துறை இயக்குநருக்கு சீமான் புகார் மனு அனுப்பியுள்ளார். எங்களுடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபா. முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

எங்களுடைய கட்சியானது இலங்கை வாழ் தமிழர்களுக்காகவும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக போராடி வருகிறது. கடந்த 15.2.2011 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் முத்துக்குமாரும் வழக்கறிஞர் போத்தியப்பன்

அவர்களும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் பழக்கடையில் நின்று கொண்டிருந்த போது மூன்று நபர்கள் சுபா. முத்துக்குமாரை தலையிலும் வயிற்றிலும் வெட்டி கொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபா. முத்துக்குமார் உயிர் இறந்தார். மேலும், வழக்கறிஞர் போத்தியப்பன் மேற்கண்ட நபர்களால் தாக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த கொலையை நேரில் கண்ட சாட்சிகளான வழக்கறிஞர் போத்தியப்பன் மற்றும் கடையில் இருந்தவர்களை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. மேலும், சுபா. முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை.

எனவே இவ்வழக்கினை மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு துறையான சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments: