![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPmIMFh9m8hb5Kx9EPb8_xWg-qOPShxVDfxWiK0m8HzC0Pzt9UQI_8RxwqP5KefXT7RzVVq_iXCWCY72808fQAw6qQP9qE6JOLjv_rA44D1_5uF8oaiRNB3mC8T8gV9liVZPqWTNR6Qew/s200/%2528Guns%252520-%252520Weapons%2529%252520-%252520Wallpapers4Desktop_com%25252018.jpg)
இனி உலக மக்கள் அரசியல், கலாசார ரீதியான வாழ்கையை சுதந்திரமாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வாழலாம் என்ற இந்த அறிவிப்பு ரஷ்யாவிடம் இருந்து வந்தால் ஆச்சரியம் இல்லை.
ரஷ்யாவின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக அணி திரண்டு போராடியவரை முகம் மாற்றி, சாயம் ஏற்றி பயங்கரவாதியாக அடையாளப்படுத்திய துரதிஷ்டத்தை அரசியல் அறிவுடையோர் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
சவுதியில் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்த பின்லேடன் ஆப்கானிஸ்தானத்தில் ஜலாலாபாத் புல்தரையில் துப்பாக்கியோடு நடக்கவைத்தது எது? அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள்தானே!!
அங்கேயே அவருக்கு கொம்பு சீவி அழகு பார்த்தவர்கள் ஒபந்த குளறுபடிகளால், இரு துருப்புகளின் "துப்பாக்கி குறிகளும்" இலக்கு மாறியது பரிதாபம்.
அவரைபற்றிய பல கட்டுகதைகள் ஆதிக்க சக்திகளின் பத்திரிக்கை வியாபாரத்தையும் பெருக்கியது. அவரை வைத்து நடத்தப்பட்ட பல நாடகங்கள், இன்னும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
அவரது வளர்ச்சிமுதல், அவரது இறப்புவரை மர்மங்களே மிஞ்சி நிற்கின்றன. ஒரு தனிமனிதனுக்காக செலவளிக்கப்பட்ட பொருளாதாரத்தை பார்க்கும் போது பெரும் வியப்பே ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் நம் முன்னாள் முதல்வர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் திணறிக்கொண்டிருக்கும் கருணாநிதி கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்று வசனம் திரை வசனம் பேசியுள்ளார். இவர் எடுக்காத கத்தியா? இவர் அரசியலில் தூக்காத கத்தியா?
முதல்வர் அவர்களே, உங்கள் வசனங்களை எல்லாம் ரசித்த மனோகரா காலம் இல்லை இது. மக்கள் மாறிவிட்டார்கள். தவிர உங்கள் அரசியல் வாழ்வில் கத்திகளும், காசுகளும் நீங்கள் மறந்திருந்தாலும் உங்கள் சக்கர நாற்காலிக்கு தெரியாத சரித்திரங்களா?
உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்கு எடுத்து கொண்டாலும் அதனோடு எழும் இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். அதில் யார் கத்தி, அதை பிடித்திருக்கும் கை யாருடையது?
No comments:
Post a Comment