
பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது.
மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், போரின் போது தமிழர்களுக்கு மனிதாபிமான சேவைகளை இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்தது. இலங்கை போரின்போது 40,000 தமிழர்களை இலங்கை அரசு குண்டு வீசி அழித்தது.
போரின் போது சர்சதேச மனித உரிமை சட்டங்களை இலங்கை அரசு கடுமையாக மீறி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு இதுவரை கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment