Apr 7, 2011

அட!! பூமியில் பண்ணிய அட்டூழியங்கள் போதாதா?

ஏப்ரல் 8, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷிய நாடுகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி வருகின்றன.

2 நாட்களுக்கு முன்பு ரஷியா தனது "சோயுஸ்" ஓடத்தை விண்வெளி மையத்துக்கு அனுப்பியது.

ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அலெக்சாண்டர், போரி சென்கோ, அமெரிக்க விண்வெளி வீரர் ரொனால்டு கேரன் ஆகியோர் அதில் பயணம் செய்தனர்.

2 நாள் பயணம் செய்து சோயுஸ் ஓடம் இன்று சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

3 வீரர்களும் விண்வெளி மையத்தில் இறங்கினார்கள். விண்வெளி மையத்தில் ஏற்கனவே 3 வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்களுடன் இவர்களும் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.

1 மாதம் கழித்து ஏற்கனவே அங்கு தங்கி உள்ள 3 பேர் பூமிக்கு திரும்பி விடுவார்கள்.
இப்போது சென்றுள்ள 3 பேரும் 170 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்து விட்டு பின்னர் திரும்புவார்கள்.

சிந்திக்கவும்: அட மனிதா பூமியில் பண்ணிய அட்டூழியங்கள் போதாதா? இப்ப வான் உலகையும் நாசம் பண்ண போறிங்களா?

No comments: