Mar 12, 2011

திமுக-காங்கிரஸ் அழிவு கூட்டணியில் குழப்பம் நீடிப்பு!!!

சென்னை, மார்ச் 12: தொகுதிப் பங்கீடு விஷயமாக காங்கிரஸ்-திமுக இடையே நிலவும் குழப்ப நிலை நீடித்து வருகிறது. இன்று காலை நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தொடராமல் போனது. காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் என்று முடிவாகிவிட்ட நிலையில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக-காங்கிரஸ் இருதரப்புக்கும் இடையே குழப்பம் நீடித்து வருகிறது.

காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு தொகுதிப் பங்கீடு விஷயமாக திமுக தரப்புடன் பேசி வருகிறது. அறிவாலயத்தில் நடந்து வரும் பல கட்டப் பேச்சுகளில் காங்கிரஸின் ஐவர் குழுவால் இன்னும் இறுதி நிலையை எட்ட முடியவில்லை என்று தெரிகிறது. 63 தொகுதிகளை பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பெற்றுவிட்டு இன்னும் தொகுதி முடிவு செய்யப்படாமல் பேச்சுவார்த்தை இழுத்தடித்துக் கொண்டு வருவது இருதரப்பு தொண்டர்களிடையேயும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

No comments: