Mar 9, 2011

மகளிருக்காக நாம் என்ன செய்தோம்!!

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, மகளிர் தினத்தைக் கொண்டாடிவருகிறோம். உலகில் மிக அதிகமானோர் பங்குபெறும் தேர்தல் நடைபெறும் நாடு என்ற இலக்கைத் தாண்டியதோடு, பதினைந்து மக்களவைத் தேர்தல்களையும் எதிர்கொண்டுவிட்டோம். நாட்டில் மொத்தமுள்ள நூற்று பத்து கோடி மக்களில், சரிபாதியான அளவில் மகளிர் வசித்து வருகின்றனர்.

இப்படியாக, சிறப்புகளைப் பெற்றுத்திகழும் இந்த நாட்டில், பூமியும், ஆறுகளும் தொன்று தொட்டு மகளிரை முன்னிறுத்தியே வந்தாலும், மனித குலத்தின் அடிப்படையான “பாலின சமத்துவம்” எனும் உயரிய நோக்கை, இன்றளவும் எட்டிப்பிடிக்காத நிலையே நீடித்து வருகிறது என்பதற்கு, நூற்றுக்கும் அதிகமான சட்டங்கள் மகளிர் உரிமைக்காக இயற்றப்பட்டுள்ள போதிலும், இன்றளவும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன.

இதற்க்கு உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, “குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்” மிகப் பெரிய சான்றாகத் திகழ்கிறது. மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா இன்று வரை நிறை வேற்றப்படாமல் இருப்பதும், நாம் பெண்களை எந்தவிதத்தில் கண்ணியப்படுத்துகிறோம் என்பதை தொரிந்து கொள்ள உதவும். அதே நேரம் இந்த மனுதர்மா பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பெண்களை தொடர்ந்து அடிமைபடுத்தும் நோக்கோடு இந்த இட ஒதுக்கீடு மசோதாவை பல சூளிநிலைகளில் எதிர்த்தே வந்துள்ளார்கள். இந்த பொன்னான தருணத்தில் எல்லாரும் ஒரே குரலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர பாடுபடுவோம்.

No comments: