
சிந்திக்கவும்: தமிழை இவர்கள் ஒன்றும் மாநாடு போட்டு வளர்க்க வேண்டாம். முதலில் ஏன் இன்றைய இளைய தலை முறை மாணவர்கள் ஆங்கில வழி கல்விக்கு ஆர்வம் கொடுகிறார்கள் என்றால்? தமிழ் படித்தால் வேலை கிடைக்காது, தமிழில் படித்தல் ஐ.எ.எஸ். போன்ற பெரிய நுழைவு தேர்வுகள் எழுத முடியாது, இப்படி பல காரணங்களுக்காக மாணவர்கள் தமிழை தேர்ந்தெடுக்க மாறுகிறார்கள். அப்படியே தமிழை தேர்ந்தெடுத்தாலும் இந்த மாணவருக்கு ஏற்பட்ட கதிதான். இந்நிலையில் நமது தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ், தமிழ் என்று வாய்கிழிய பேசி ஒட்டு பொறுக்க கோடி கணக்கில் செலவழித்து செம்மொழி மாநாடுகள் நடத்துவது இந்த பணத்தில் இருந்து கொஞ்சத்தை இதுபோல் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்க உதவலாம். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்லி தமிழர்களை ஹிந்தி படிக்கவிடாமல் செய்து இந்தியாகுள் இவர்களை அண்ணியம் ஆக்கினார்கள். தமிழர்கள் தமிழ் நாட்டை விட்டு அடுத்த மாநிலத்திற்கு போகவேண்டும் என்றால் அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி முடியாது.
தமிழை வளர்ப்பது என்பது வேறு இன்னும் ஒரு மொழியை கற்றுகொள்வது என்பது வேறு என்பதை நன்குணர்ந்த இவர்கள் தமிழை வைத்து அரசியல் செய்து பிழைப்பு நடத்தினார்கள். தங்களது வாரிசுகளை ஆங்கில வழி கல்வி கற்க வைத்தார்கள், ஹிந்து மொழி கற்க வைத்தார்கள். இந்த அரசியல் தலைவர்களின் வாரிசுகள் ஹிந்து, ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதை பார்க்கலாம். இதில் இருந்து தமிழா பாடம் கற்றுகொள் இந்த ஒட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களை நம்பாதே. அறிவு என்கிற ஆயுதம் எடு, இந்த ஒட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களை நம்பி உன் காலங்களை வீண் செய்வதை விட்டு விட்டு. ஒரு மக்கள் புரட்ச்சிக்கு தயார் ஆவோம். இந்த ஊழல் பெரிச்சாளிகளை, சாக்கடை அரசியல்வாதிகளை உள்ளே அனுப்பிவிட்டு, எகிப்த், துசினியா, போன்று இளைஞ்சர்கள் இந்த நாட்டின் விடிவுக்கு ஒரு காரணியாக அமைவோம்.
அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்
No comments:
Post a Comment