Feb 22, 2011

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? கி.வீரமணி!!

பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைத் தடுப்பதா? இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துக்கம் விசாரிக்க அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தொல்.திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும்கூட.ஏற்கனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, ராஜபக்சே விடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் .கூடாது என்று திரும்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா?

காரணத்தைக் கூறுங்கள் என்று பலமுறை அவர் வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை. அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை. துக்க நிகழ்ச்சி மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது? இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக்கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகிவிட்டது. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

No comments: