Jan 8, 2011

எய்ட்ஸ் நோய்க்கு புதிய மருந்து!!!

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்து களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர்.

எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது. 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் தேசிய புற்று நோய் நிறு வனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயா ளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூ யார்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

No comments: