Jan 1, 2011

ராஜபட்ச ஆட்சியில் இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது.

கொழும்பு, ஜன.1- அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு நீடிக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ராஜபட்ச தலைமையிலான ஆட்சி நீடிக்கும் வரை இலங்கைக்கு உண்மையான புத்தாண்டு என்பதே கிடையாது." என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்திக்க: இராசபக்சே ஆட்சியில் இருக்கும் வரை இலங்கையில் புத்தாண்டே கிடையாது என்பதுபோல் சிங்களரின் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைத் தமிழர்களுக்கும் புத்தாண்டே கிடையாது. தமிழ் ஈழம் மலரும் நாளே அவர்களுக்குப் புத்தாண்டாகும்.

No comments: