Jan 1, 2011

மத்திய அரசை மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத்.

அயோத்தி, ஜன.1- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தை தரவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக்சிங்கல் மிரட்டிள்ளார். அயோத்தியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்காவிட்டால் பெரியளவில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும், புதிய போராட்டத்தை உடனடியாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம். ராமர் கோயிலுக்கான கல் சிற்ப வேலைகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும்." என்று அசோக்சிங்கல் கூறினார்.

No comments: