Jan 6, 2011

பறவைகள், மீன்கள் மர்மமான முறையில் சாவு: அமெரிக்காவில் பரபரப்பு.

அமெரிக்காவில் வானிலிருந்து மர்மான முறையில் இறந்து விழுந்த 5000-த்திற்கு மேற்பட்ட கரும்பறவைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாகாணத்தில் உள்ள பீபீ எனும் சிறிய நகரம். கடந்த 1-ம் தேதியன்று புத்தாண்டு கொண்டாட இருந்தபோது இந்நகர மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நகர் முழுவதும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான கருப்பு நிற பறவைகள் இறந்து கீழே விழுந்தன. பின்னர் தொடர்ச்சியாக கொத்து கொத்தாக பறவைகள் இறந்து விழத்தொடங்கின. இது குறித்து கால்நடைத்துறை பறவைகளை பரிசோதனை செய்தனர் அதில் எவ்வித நோய்களும் தாக்கவில்லை. விசமும் வைத்து கொல்லப்படவில்லை என்பதும் தெரியவந்தது. எனினும் இறந்து விழுந்ததற்கான காரணம் தெரியமால் திணறிவருகின்றனர்.

ஏறத்தாழ பீபீ நகரில் 100 மைல் சுற்றளவில் இறந்த பறவைகள் தான் தெரிகின்றன என ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே நகரில் உள்ள ஆர்கன்சஸ் நதியில் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் மீன்கள் மர்மமான முறையில் செத்த மிதந்தன என்றும் அதுபோன்ற சம்பவம் இப்போது நடந்ததுள்ளது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments: