Oct 17, 2010

தீவிரவாதமும், இந்துத்துவமும் தொடர்புடையவை அல்ல: சாத்தான் வேதம் ஓதுகிறது.

நாக்பூர், அக்.17: காவித் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் எனக் கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்துத்துவத்தையும், தீவிரவாதத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்த முடியாது எனக் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட விஜயதசமி நாளை ஒட்டி நடைபெற்ற பேரணியைப் பார்வையிட்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தீவிரவாதமும், இந்துத்துவமும் வேறுவேறானவை; அவற்றை ஒருபோதும் தொடர்புபடுத்த முடியாது என்றார்.

காவித் தீவிரவாதம் எனக் கூறுவது இந்துக்களின் வலிமையை பலவீனப்படுத்தவும், முஸ்லீம்களை சமாதானப்படுத்தவும் செய்யப்படும் முயற்சியாகும் என்றார் அவர்.
இந்துக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒருசில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் குறைகூற முடியாது. அவ்வாறு கூறுவதில் நியாயமில்லை. இந்துக்கள் பொதுவாக தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை என மோகன் பாகவத் கூறினார்.

ராமர் கோயில் என்பது நமக்கு பெருமைவாய்ந்ததாகும். இந்தியாவில் நூற்றுக்கணக்கான ராமர் கோயில்கள் இருந்தாலும் ராமர் பிறந்த இடம் என்பதால் அயோத்தி முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு தேசிய நினைவுச்சின்னம். புதிய கட்டடம் கட்டுவதற்காக அப்போதைய ஆட்சியாளர்களால் அது இடிக்கப்பட்டது என கூறினார்.

சிந்திக்க : இந்த காவி பயங்கரவாதிகள் சுதந்திரத்துக்கு பின்னால் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை நடத்தி, இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தார்கள். பயங்கரவாதி நரேந்திர மோடி மற்றும் அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபால ஐயன் ஆகியோர் பல கலவரங்களை நடத்தி அப்பாவி முஸ்லிம்களை லேட்ச்ச கணக்கில் கொன்று குவித்தார்கள். இந்தியாவின் நீதித்துறை, காவல்துறை, அரசியல் துறை, ராணுவம் ,பத்திரிகை துறை எல்லாவற்றிலும் இந்த ஹிந்து பாசிச பயங்கரவாதிகள் வூடுருவி விட்டார்கள். இந்தியாவை ஹிந்து நாடக மாற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதுவரை எந்த ஹிந்துத்துவா அமைப்புகளும் தடை செய்யப்படாமையும், அவர்கள் கலவரம்களை நடத்தி ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களை கொன்று குவித்து விட்டு சுதந்திரமாக உலாவி வருவதும் இந்தியா ஒரு ஹிந்து நாடாக மாற்றப்பட்டு விட்டதோ என்று சந்தேகத்தை உண்டாக்குகிறது.