
பதினொரு மீட்டர் அகலமுள்ள நூதனமான பொருளொன்று வியாழனன்று காலை (இந்திய நேரம் காலை சுமார் 6:45 மணிக்கு) பூமியை மிக அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது அனேகமாக ஒரு சிறு கோளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தக் கல் பூமியைத் தாக்காது என்றும் ஆனால் 130,000 கி.மீ. அருகாமையில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான மூன்றில் ஒரு பங்கு தூரமாகும். இநதக் கல்லுக்கு 2010 AL30 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் 2010 AG30 என்று மற்றொரு கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளுது. 13 மீட்டர் அகலமுள்ள அந்தக் கல் வெள்ளியன்று பூமியை 1 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment