Jan 19, 2010

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பத்திரமாக உள்ளார்


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும் , விரைவில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என்றும் அதுவரை தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி வரும் தவறான தகவல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என விடுதலைப் புலிகளின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் தமிழ் மாறன் கேட்டுக் கொண்டுள்ளார் .

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் போரில் கொள்ளப் பட்டதாக தெரிவித்து ஒரு உடலையும் இலங்கை அரசு காட்டியது . அப்போதே இது பிரபாகரன் உடல் அல்ல என்ற சர்ச்சை கிளம்பியது. ஆரம்பத்தில் மறுத்த விடுதலைப் புலிகளின் சர்வேதேச பொறுப்பாளர் கே.பத்ம நாதன் கூட சில நாட்களுக்கு பின் பிரபாகரன் போரில் கொல்லப் பட்டு விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வைகோவும், பழ.நெடுமாறனும் பிரபாகரன் கொல்லப் பட வில்லை என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

அதை உறுதிப் படுத்தும் விதமாக தற்போது விடுதலைப் புலிகளின் இணைய தளத்திலும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. அந்த செய்தியில் ''சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார். எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம். இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்'' என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது

No comments: