Nov 24, 2009

பால்மாவில் கலப்படம் தொடர்பாக சீனாவில் இருவருக்கு மரண தண்டனை

சீனாவில் 6 குழந்தைகள் உயிரிழந்து முன்னூறுக்கும் அதிகமான குழந்தைகள் சுகவீனமடையக் காரணமான பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருக்கு சீனா மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தவருக்கு நஞ்சடைந்த உணவை தயாரித்து விற்றதற்காக தண்டனை வழங்கப்பட்டது.

மொத்தமாக 21 பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, இந்த வருட முற்பகுதியில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

No comments: