May 11, 2016

2016 தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்!

ஒட்டு போடுங்கள்! அம்மா ஒட்டு போடுங்கள்! என்று பிச்சை கேட்டு அரசியல் பொறுக்கிகள் உங்கள் இல்லங்களை தேடி வருவார்கள்.

அழித்தொழிக்கப்பட  வேண்டிய  தீய சக்திகள் 

1). கருணாநிதி: தீமை மற்றும் ஊழலின் மொத்த உருவமும் அதன் கழிசடை கூட்டணியான காங்கிரசும் உங்களை தேடி வருவார்கள். இந்த கூட்டணியை இந்த தேர்தலோடு வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையான கடமை.

2). ஜெயலிலதா: ஆணவம் தலைக்கு ஏறிய ஸ்டிக்கர் ராணி, அம்மா என்று தன்னை அழைக்க சொல்லி தாய்மையையே இழிவுபடுத்தும் பகல் கொள்ளைக்காரி.

3). பிஜேபி (BJP ) & இந்து மக்கள் கட்சி: மதகலவரங்கள் நடத்தி, அப்பாவி மக்களின் ரத்தங்களை ஓட்டி, அதன் மூலம் மக்களை பிரித்து அரசியல் நடத்தும் கட்சி. அதிபயங்கரவாத அமைப்பான RSS இயக்கத்தின் அரசியல் அணி.

இந்த மூன்று கட்சிகளையும் தமிழக அரசியலில் இருந்து துடைத்தெறிவது தமிழக மக்களின் இப்போதைய தலையாய கடமையாகும்.

மக்கள் நல கூட்டணி - (சந்தர்ப்பவாத கூட்டணி). 

மதிமுக: வைகோ பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பேசி வந்தாலும் பச்சோந்தி போல் அணி மாறுவது, கொள்கையே இல்லாமல் கண்டவருடன் கூட்டணி சேர்வது இதன் மூலம் அரசியல் அநாதை ஆனவர்.

வலது & இடது காம்யூனிஸ்ட் கட்சிகள்:  கொள்கை அற்ற கோமாளிகள். இவர்களுக்கும் இவர்கள் சார்ந்திருக்கும் காம்யூனிச தத்துவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதவர்கள். மொத்தத்தில் போலி காம்யூனிஸ்ட்கள்.

தேமுதிக: எந்தவித திமையும் இல்லாமல், படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதியை கொன்று இந்தியாவை காப்பாற்றி, திரைப்படங்களில் வசனங்கள் மூலம்  அரசியல் பேசி, இதையே மூலதனமாக கொண்டு அரசியலுக்கு வந்த கோமாளி. தனிப்பட்ட முறையில் அவர் நல்லவராக இருக்கலாம் அது ஒன்றே ஒரு நாட்டை ஆள தேவையான தகுதி ஆகாது. 

தமிழ்மாநில காங்கிரஸ்: காமராஜருக்கு பின் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் ஒரு லட்டர் பேடு இயக்கம் போல்தான் இருந்து வந்தது. ஈழப் படுகொலைக்கு பின்னர் தமிழ் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ,  புதைக்கப்பட்ட ஒரு கட்சி.

விடுதலை சிறுத்தைகள்: தாழ்த்தப்பட்ட, ஒருக்கப்பட்ட மக்களுக்கு போராடும் ஒரு அமைப்பு, ஈழவிடுதலை முதல் கூடங்குளம் அணுவுலை பிரச்சனை வரை எல்லா மக்கள் பிரச்சனைகளிலும் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் ஒரு தலைவர்தான் தோல். திருமாவளவன்.  மக்கள் நல கூட்டணியில் உள்ள ஒரே உருப்படியான கட்சி இதுதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். 

பாட்டாளி மக்கள் கட்சி. கலையில் ஒரு கூட்டணி மலையில் கூட்டணி என்று கட்சி தாவி பொலிவிழந்து போன கட்சி. ஈழவிடுதலை, முதல் கூடங்குளம் அணுவுலை பிரச்சனைகள் வரை குரல் கொடுக்கும் கட்சி என்பது மறுப்பதற்கில்லை.

2016 தேர்தலில் ஓட்டளித்து ஆதரிக்கவேண்டிய 
நல்ல சக்திகள் 

1).  நாம்தமிழர் கட்சி: ஊழல் அற்ற ஆட்சி, இயற்க்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, கல்வி, மருத்துவம், குடிநீர் அனைவருக்கும் இலவசம், வேளாண்மை அரசு தொழில், இப்படி சிறந்த செயல் திட்டங்களுடன் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் புதிய கட்சி.  

2). சோசியல் டிமாக்ரடிவ் ஒப் இந்தியா (SDPI): ஈழத்தமிழர் போராட்டம், கூடங்குளம் அணு உலை போராட்டம், தமிழக மீனவர் போராட்டம், சென்னை, கடலூர் மழை வெள்ளம், பூரண மதுவிலக்கு என்று தொடர்ந்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளை பேசி மக்களுக்கு ஆதரவாக போராடி களம் நிற்கும் கட்சி. இவர்கள் 30 தொகுதிகளில் தனித்து போட்டி இடுகிறார்கள்.

தமிழக வாக்காள பெருமக்களே! வருகிற  2016 தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நல்ல சக்திகள் என்கிற தேர்வில் முதல் இடத்தில் நாம்தமிழர் மற்றும் SDPI கட்சிகள் வருகின்றது. இதில் அந்த அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை, வேட்பாளர்களை கருத்தில் கொண்டு இவர்களுக்கு வாக்கு அளித்து இந்த இரண்டு கட்சியையும் பலப்படுத்துங்கள்

ஜெயிக்கிற கட்சிக்குதான் ஒட்டு 
இந்த அடிமுட்டாள்தனமான சிந்தனையை முதலில் தூக்கி குப்பையில் போடுங்கள். எந்த புது கட்சியும் எடுத்தவுடன் ஜெயித்துவிட முடியாது. நடுநிலையான மக்கள் தொடர்ந்து இந்த புது சக்திகளுக்கு வாக்களித்து அவர்களை அரசியலில் கால்பதித்து நிற்க உதவிடவேண்டும். இந்த கட்சிகளின் வாக்கு விகிதத்தை அதிகப்படுத்துவத்தின் மூலம் இவர்கள் தமிழகத்தில் ஊழல், லஞ்சம் அற்ற ஒரு புதிய அரசியலை படைக்க உதவ முடியும். 

சிந்திக்கவும்: வருகிற காலங்களில் நாம்தமிழர் கட்சி, SDPI கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி என்கிற 4 கட்சிகளும் ஒரே அணியாக கூட்டு சேர்ந்தால் தமிழகத்தில் புதிய அரசியல் வரலாறு படைக்க முடியும் என்பதே எனது மேலான சிந்தனையும், கருத்துமாகும்

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல். 

1 comment:

Seeni said...

பகிர்வுக்கு நன்றி..