Nov 8, 2013

நைஜீரியா வாழ் இந்தியர்களுக்கு பிரச்சனயை உண்டாக்கும் BJP!

நவ 09/2013: இந்தியாவில் சுற்றுலா தலமாக திகழும் BJP ஆளும் கோவாவில், நைஜீரியர்கள்  காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது வருத்தத்துக்கு உரியது என இந்தியாவுக்கான நைஜீரிய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில்  இந்தியாவில் வாழும் நைஜீரிய சமுதாயம் அவமானத்துடனும், மனவருத்தத்துடனும் வாழ்வதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் இது குறித்து கூறுகையில்  இந்தியாவில் 50, 000 ஆயிரம் நைஜீரியர்கள் வாழ்கிறார்கள்.ஆனால், நைஜீரியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பதை பிஜேபி மறந்து விடக் கூடாது என கூறினார். இரு நாட்டு நல்லுறவையும் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தையும் புரிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுடெல்லியில் உள்ள நைஜீரியத் தூதரகத்தின் அதிகாரிகள் கோவாவில் தங்கியுள்ள நைஜீரிய நாட்டவர்களை சந்தித்துப் பேசினர். பின்னர் கோவா மாநிலத்தின் காவல்துறை பொது இயக்குனரான கிஷன் குமார் மற்றும் வடக்கு கோவா எஸ்.பி.யான பிரியங்கா காஷ்யப் ஆகிய இருவரையும் சந்தித்தார்கள். நைஜீரிய நாட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். 

அரசியல்வாதிகள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்கள் மீது பழி சுமத்துவது சரியல்ல என்று  நைஜீரிய தூதர் குறிப்பிட்டார். மேலும், இந்தச் சம்பவங்கள் குறித்த அவரது அதிருப்தியை பத்திரிகையாளர்களிடமும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கோவாவின் பாரா கிராமத்தில் கொல்லப்பட்ட நைஜீரிய இளைஞரின் படுகொலை தொடர்பாக வடக்கு கோவாவிற்குள்பட்ட சப்போரா கடற்கரைப் பகுதியில் சுரேந்திர பால் என்பவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர்.

சிந்திக்கவும்: பாரதிய ஜனதா ஆளும் கோவாவில் வெளிநாட்டினருக்கு எதிரான விசயங்களை கட்டவிழ்த்து வருகிறது ஹிந்துத்துவா. கோவாவில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் சமீப காலங்களாக செயல்பட்டு வருகின்றன. இவர்கள் வெளிநாட்டினருக்கு எதிரான பல்வேறு சூழ்ச்சி மற்றும் கலவரங்களை திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் பாரதிய ஜனதா உளவுத்துறை மற்றும் காவல்துறை துணையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வாழ்வதோ வெறும் 50 ஆயிரம் நைஜீரியா மக்களே ஆனால் நைஜீரியாவில் வாழ்வதோ 10 லட்சம் இந்திய குடிமக்கள் என்பதை பாரதிய ஜனதா மறந்து விட கூடாது என்கிற நைஜீரிய தூதரின் வார்த்தைகளை புறக்கணிக்க முடியாது. நைஜீரியாவில் வாழும் இந்தியர்களுக்கு பிஜேபி பிரச்னைகளை உண்டு பண்ணுகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

4 comments:

Seeni said...

mmmm....

kodumaithaan...

Anonymous said...

யோவ்....சுத்த கவாளிதனமான ஆளுய்யா நீரு....எழுதுவது எல்லாமே காழ்புணர்வும்,இந்து மத எதிர்ப்பும், இந்திய வெறுப்பும்தான்.மகா அயோக்கியத்தனம் இது. அந்த நைஜீரியர்கள் போதை பொருள் கடத்தல் தொழிலில் உள்ளனர்,அவர்களின் வியாபார உறவுகளில் ஏற்படும் மோதல்கள் கொலை வரைக்கும் போகிறது என்று அந்த மாநில போலீஸ் உயர் அதிகாரியே விளக்கியுள்ளார். இதில் எங்கேயிருந் பி.ஜே.பி. வந்தது? சரடு விட்டாலும் சரியாக விடு மேன். உனக்கு இந்தியாவையும் இந்துக்களையும் அழித்து விட வேண்டு. உன் கூட்டமே உலகை அழிக்க பிறந்த கூட்டம்தானே இதெல்லாம் ஒரு பொழைப்பு..த்தூ..

Anonymous said...

யோவ்....சுத்த கவாளிதனமான ஆளுய்யா நீரு....எழுதுவது எல்லாமே காழ்புணர்வும்,இந்து மத எதிர்ப்பும், இந்திய வெறுப்பும்தான்.மகா அயோக்கியத்தனம் இது. அந்த நைஜீரியர்கள் போதை பொருள் கடத்தல் தொழிலில் உள்ளனர்,அவர்களின் வியாபார உறவுகளில் ஏற்படும் மோதல்கள் கொலை வரைக்கும் போகிறது என்று அந்த மாநில போலீஸ் உயர் அதிகாரியே விளக்கியுள்ளார். இதில் எங்கேயிருந் பி.ஜே.பி. வந்தது? சரடு விட்டாலும் சரியாக விடு மேன். உனக்கு இந்தியாவையும் இந்துக்களையும் அழித்து விட வேண்டு. உன் கூட்டமே உலகை அழிக்க பிறந்த கூட்டம்தானே இதெல்லாம் ஒரு பொழைப்பு..த்தூ..

நண்பரே தங்களுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை.
பாம்பு கொத்தும்,நாய் குலைக்கும்,
இதெல்லாம் அதனுடைய இயற்கை குணங்கள்.அல்லாவே அவர்களை மாற்ற முடியவில்லை.
இதற்கெல்லாம் போய் ஒரு பின்னுாட்டம் தேவையே இல்லை.
கழிவுகள் மீது கல் எறிந்தால் நமது மீதுதான் தெறிக்கும்.

Barari said...

அனானி பின்னூட்டங்களின் வாயிலாக ஒன்று தெளிவாகிறது.உண்மை சுடும்.சுட்டதின் பிரதிபலிப்புதான் இத்தகைய பின்னூட்டம்.