Nov 11, 2013

கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்! SDPI!

நவ 11/2013: காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முழு வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும், அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்யப்பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர், குழந்தைகளை கொத்து கொத்தாய் படுகொலை செய்யப்பட்டனர்,. சரணடைந்தவர்களை  ஈவிரக்கம் இன்றி கொன்றனர் 

இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட பாலச்சந்திரனின் படங்கள் மற்றும் இசைப்பிரியாவின் வீடியோ காட்சிகளும் சாட்சியங்களாக உள்ளன. இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை போன்ற எந்த நாடுகளையும் மனசாட்சி உள்ளவர்களால் மன்னிக்க முடியாது. ஆனால் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதற்கு பதில் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்தி ராஜபக்சேவிற்கு மகுடம் சூட்ட முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழக சடடமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஒரு பொருட்டாக கருதாமல் மாநாட்டை புறக்கணிக்க தயங்கும் மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டித்தக்கது. இந்த தருணத்தில் தமிழர்களிடையே காணப்படும் கருத்துவேறுபாடுகளையும், அரசியல் மாச்சர்யங்களையும் மறந்து நமது ஒற்றுமையை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் நமது கண்டனத்தைத் தெரிவிக்கும் பொருட்டு 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலைநிறுத்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. அதிமுக, திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளித்து இப்போராட்டம் வெற்றியடையச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

No comments: