Jan 20, 2012

தமிழகத்தை அழிக்க வட இந்தியர்கள் சதி!

JAN 21: கல்பாக்கம் அணு மின்நிலையம்மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி, சமயநல்லூர் போன்ற நகரங்களில்  அனல் மின்நிலையங்கள்

குந்தா, காடம்பாறை, மேட்டூர், பெரியாறு, சுருளியாறு, வைகை, கூடலூர், மோயாறு, போன்ற நீர் மின்னுற்பத்தி நிலையங்கள். குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையங்கள்.

கயத்தாறு ,ஆரல்வாய்மொழி, தேனி, கணவாய்ப் பகுதி, ஆகிய பகுதிகளில்  உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள். சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.


இதுவெல்லாம் போதாது என்று கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்டி தமிழகத்தின் மின்சார பற்றாக்குறையை தீர்க்கப்போவதாக மார்தட்டுகிறது மத்திய அரசு.

தமிழகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணு, நீர், அனல், சூரிய, கற்றலை, கதவணை, போன்ற எண்ணிலடங்கா  மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் இருக்க பின் ஏன்? தமிழ் நாட்டுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்படுகிறது.

தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரம் நமக்கு போதுமானது. ஆனால் என்ன செய்கிறார்கள் என்றால்?  நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இப்படி வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் ஆழ்த்திவிட்டு கூடங்குளம் அணு மின்நிலையங்கள் போன்று மேலும் பல அணு உலைகளை அமைத்து தமிழர்களை கொல்லப்பார்கின்றனர்.

இது போதாதென்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அனுமதி கொடுக்கப்படாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, முதல் தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகம் வரை  அழிவு சக்திகளை அனைத்தையும் தமிழகத்தை நோக்கி தள்ளிவிடுகிறார்கள். கூடங்குளத்தில் அமைக்கும் அணு மின்நிலையத்தை கேரளாவிலோ அல்லது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலோ அமைக்க வேண்டியதுதானே.

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பீற்றிகொள்ளும் பயங்கரவாதி மோடி ஆளும் குஜராத்தில் ஒரு  அணுவுலை கூட அமைக்கப்படவில்லை. ஆனால்  தமிழக ஹிந்துத்துவா பயங்கரவாத கூட்டமெல்லாம் கூடங்குளத்தை உடனே திற என்று ஒப்பாரி வைக்கின்றன. தமிழகத்தில் அனைத்து அணுவுலைகளையும், நச்சு தொழில்சாலைகளையும் அமைப்பதில் இவர்களுக்கு என்ன அப்படி ஒரு ஆனந்தம்.

வட இந்திய ஹிந்தி அரசியல்வாதிகளிடம் ஹிந்தி மொழி என்கிற மொழிவாரியான ஒரு ஒற்றுமை இருக்கிறது. தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத வடஇந்திய ஹிந்தி அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தமிழகத்தை திட்டமிட்டே அழிக்கும் சதி வலைகளை பிண்ணி வருகின்றனர். வட இந்தியர்கள் தமிழர்களை என்றுமே ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.  அதனாலேயே இந்தியாவின் பிரதமராக இதுவரை ஒரு தமிழனும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங்க் இருக்கும்போது ஏன்  ப. சிதம்பரத்தை இவர்கள் பிரதமராக்கவில்லை. அவருக்கு என்ன திறமை இல்லையா? அல்லது அவர் மன்மோகன் சிங்க்கை விட அறிவில் குறைந்தவாரா? மொத்தத்தில் ஒரு தமிழன் இந்தியாவின் பிரதமராக முடியாது. இதே நிலைதான் ஈழத்திலும் இலங்கையின் பிரதமராக ஒருதமிழன் ஆக முடியாது இதை அவர்கள் வெளிப்படையாக சட்டமாக்கி வைத்துள்ளார்கள்  ஆனால் இந்த வட இந்திய வடவர்கள் இதை எழுதாத சட்டமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பாரதிய ஜனதா முதல் காங்கிரஸ் வரை இனி எந்த வட இந்திய வடவர்களும் தமிழத்தில் கால் பாதிக்க முடியாது. எல்லாம் முள்ளி வாய்க்காலோடு முடிந்து விட்டது. தமிழகத்தில் மிகபெரிய அளவில் தமிழர் எழுச்சி போராட்டங்கள் வலு பெறுகின்றன. இதை குலைக்கும் நோக்கோடு இதுபோன்ற நச்சு ஆலைகளையும், ஆய்வகங்களையும் தமிழகத்தில் நிறுவுவதன் மூலம் தமிழகத்தை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றி கடல்படை தளங்கள் முதல் ராணுவதளங்கள் வரை அமைக்க நடக்கும் திட்டமே இது.

ஈழத்தில் ஒரு இன அழிவை நடத்தி முடித்த இந்தியாவை  பெரும் அச்சம் ஆட்டிப்படைக்கிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னால் தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி உருவாகி வருகிறது. தமிழ் சிந்தனைவாதிகள் ஒன்றுபட்டு பெரும் தமிழர் எழுச்சியை கட்டி அமைத்து வருகின்றனர். வட இந்திய கொடுங்கோன்மை மற்றும் புறக்கணிப்பு அரசால் எந்த நன்மையையும் இல்லை என்பதை தமிழர்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். தனிதமிழ் நாடே தமிழர்களுக்கு உண்டான ஒரே தீர்வு என்பதை நோக்கி காலச்சக்கரம் நகர்கிறது. இதன் விளைவாக நகர்த்தப்படும் விடயங்களே இவைகள். 
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

32 comments:

Anonymous said...

எந்த வளம் இல்லை எங்கள் தமிழ் நாட்டில்

நாங்கள் ஏன் கை ஏந்தவேண்டும் ஹிந்தி நாட்டில்.

ஒழுங்காய் ஒன்றுபடுவோம் தமிழர்கள் என்று..

சாரியான பாடம் கற்பிப்போம் எதிர்காலத்தில்.

நட்புடன்: ரேவதி.

தமிழ் மாறன் said...

தமிழர்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்று நினைத்து கொண்டுதான் இந்த வடநாட்டுகாரன் பேரழிவு தொழில்சாலைகளை எல்லாம் தமிழகத்தின் பக்கம் அனுப்பி வைகிறான். நமது மானம் கெட்ட அரசுகளும் அதை பணத்துக்காக தலை அசைகிரார்கள். மலையாளிகளிடம் இதுவெல்லாம் பலிக்காது.

Anonymous said...

முத்தாய்ப்பான ஒரு பதிவு, தொடர்ந்து தமிழர் சிந்தனை களத்தை ஊக்குவிக்கும் பதிவுகளை வெளியிட்டு வருவதற்கு வாழ்த்துக்கள்.

by: முத்தமிழ் செல்வன்.

மலர்விழி said...

வணக்கம் தோழி நலமா.... தமிழகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணு, நீர், அனல், சூரிய, கற்றலை, கதவணை, போன்ற எண்ணிலடங்கா மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தும் மீண்டும் மீண்டும் இது போன்ற அணு உலைகளையும், அழிவு ஆலைகளையும் தமிழகத்தை நோக்கி கொண்டுவருவதில் நிச்சயமாக ஒரு சூழ்ச்சி இருக்கிறது. அதை அழகா படம் பிடித்து சொல்லியமைக்கு நன்றி தோழி. என்ன இருந்தாலும் உங்களமாதிரி எழுத வாராது எனக்கு..... நல்லா ரௌத்திரமாதான் எழுதுறேங்க.

Anonymous said...

யாழினி உங்களை நிச்சயம் புகழ்ந்தே ஆகவேண்டும். ஏன் என்றால் எப்படி அழகாக ஒரு மின்சார பிரச்சனையை வைத்து தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க ஒரு செய்தியை சொல்லி இருப்பது ஹய் லைட்.

Anonymous said...

It's. Very good article .....thank u...

Anonymous said...

சூப்பர் கட்டுரை. தனித்தமிழ்நாடு ஒன்றுதான் இதற்கு தீர்வு.

Anonymous said...

english மாறன் வாழ்க! தமிழகத்தை அழிக்க 24 மணிநேரமும் வேறு வேலையில்லாமல் யோசிக்கிறதால் வட இந்தியர்களை விட்டுப் பிரிவோம். இதை நான் அமெரிக்காவிலிருந்து காலாட்டிக்கொண்டே டைப்படிக்கிறேன். எப்பூடி?

Anonymous said...

ரேவதி நல்ல கட்டுரை
எழுதியிருக்கிறாய் - யாழினி

யாழினி நல்ல கட்டுரை எழுதியிருக்கிறாய் - மலர்விழி

மலர்விழி நல்ல கட்டுரை எழுதியிருக்கிறாய் - ரேவதி

மூணுபேரும் நல்ல கட்டுரை எழுதியிருக்கிறீர்கள் - english மாறன்...

english மாறன் நல்ல கமென்ட் போடுகிறீர்கள் -

மலர்விழி..............

Anonymous said...

Well Said....Your article is true....

Few more things...

1. Central government not supporting Sethu sumuthram project

2.Not supporting the linking the rivers.

3. Do we have enough industries in southern districts???NO. Why all the politicians, especially National parties, they dont want us to improve....

G Jawahar George said...

It looks like there you are you are trying to destroy India. world is moving towards globalisation. now you people bring up a point to make tamilnadu as a separate country.dont try to destroy peace in our country. if there is a problem in the politics or country, making the people aware of it is a good thing, but making it as a revolution or activism is not right. WE LIVE IN INDIA AS INDIANS, NOT TAMILIANS. it was a great work with loss of blood and life by our ancestors to make this free united Indian nation. and no Indian will want this free united nation to be cut into pieces. Indians think, there are foreign forces, even some frustrated Indians make propaganda to disrupt peace in my country.

tamilan said...

பசுவின் புத்திரர்கள்!
பசுவை நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

பசுக்களைக் கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.
இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை! பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது என்பது தவறானது.
உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே!
சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?
செத்துப் போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம் இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே கிடையாது என்பது விளங்கிடவில்லையா?


பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா?
எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?
சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!
பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர். ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர். அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.


மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!
------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012

Anonymous said...

ஜவகர் ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்கள் குடும்பத்தில் நீங்கள் யாரையும் இழக்கவில்லை. உங்களுக்கு அந்த வேதனையும் இல்லை. 35 வருட காலம் ஒரு போராட்டத்தின் மூலம் ஒரு மக்கள் தங்களுக்கு என்று ஒரு நாட்டை கட்டி அமைத்ததை சீர்குலைத்து நாசம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நீர் வேண்டுமானால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ளும். உங்கள் குடுபத்தோடு கர்நாடகாவில் போயி இருந்து கொள்ளும் எப்போவாவது காவிரியில் தமிழன் தண்ணி கேட்க்கும்போது கர்நாட்டகாகாரன் உங்களை பதம் பார்ப்பான் அப்போது புரியும் உங்களுக்கு என்ன நடக்கிறது என்று. சும்மா வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு போக வேண்டாம்.

Anonymous said...

அனானிக்கு நல்லா வயிறு எரியுது என்றார் ரேவதி
சரியா சொன்னே அக்கா சொன்னார் யாழினி..
தனிதமிழ் நாடு என்றதும் ஹிந்துதுவாவுக்கும், பார்பனர்களுக்கும் பொறுக்கல
தங்கச்சி என்றார் மணிமாறன்.
தமிழர்கள் ஒன்றுபடுவதை பிடிக்காத துரோகிகளுடைய
பேச்சை விட்டு தள்ளு அண்ணா சொன்னார் ரேவதி.
நாமெல்லாம் ஜாதி,மத வேறு பாடுகளை கடந்து தமிழர்கள்
என்று ஒன்றுபடுவதை விரும்பாதவர்களின் பேச்சில் நமக்கென்ன அக்கறை.

Anonymous said...

தமிழ் நாட்டில் பிறந்தாலும் வடஇந்திய ஹிந்திகாரன்தான்தான் நம்ம சோ, ராமகோபாலன், தினமலர் மற்றும் ஹிந்துத்துவா வகைறாக்கள் சரி அந்த வடஇந்திய ஹிந்துத்துவா எங்கிருந்து வந்தது அதற்கும் இந்த நாடு சொந்தம் இல்லை அவர்களும் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களே. அதனால் நீங்கள் தனி தமிழ் நாடு என்று இந்த பார்ப்பன ஹிந்துத்துவா வந்தேறிகளை தமிழ் நாட்டை விட்டு மட்டும் விரட்டி விட்டு இந்தியாவை இருளில் தள்ளி விட வேண்டாம். இவர்கள் அனைவர்களையும் இந்தியாவை விட்டு தூரத்தி விட்டு இந்தியாவை ஒளிரச்செய்ய அனைவரும் பாடுபடுவோம். இது ஒவ்வொரு இந்தியன் மீதும் கடமை.

Anonymous said...

அதனால் நீங்கள் தனி தமிழ் நாடு என்று இந்த பார்ப்பன ஹிந்துத்துவா வந்தேறிகளை தமிழ் நாட்டை விட்டு மட்டும் விரட்டி விட்டு இந்தியாவை இருளில் தள்ளி விட வேண்டாம்.///இதென்ன புதுக் குழப்பம். எக்ஸ்கியூஸ்மி. எங்களுக்கு தனித்தமிழ்நாடுதான் வேணும். வேற எதுவும் வேண்டாம்.பின்ன எப்படி இலங்கைத் தமிழன் இங்கே வர்றது. எப்படி பிரபாகரன் ஆட்சியை அமைக்கிறது. நாங்க இலங்கைத் தமிழர் எவ்வளவு ஒற்றுமையா(!!!!!!!!!!!!) இருக்கோம் தெரியுமா?

Anonymous said...

அசிங்கப்பட்டான்யா யவகர் ,,,பெரிய யவகர் ஸ்ரீநாத் என்று நினைப்பு ,,,பயப்புள்ள வடக்கத்தி பொண்ணு ஒன்றை லவ் பண்ணுது என்று நினைக்கிறன்

VANJOOR said...

உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்?

கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?.

ஆனால் அது தான் உண்மை!

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க திப்பு சுல்தானை தூண்டியது.



மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது.


இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

"நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது". “

-----------------------------------------------
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

>>>> பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.” <<<<<<

.

Anonymous said...

பொம்பளைங்களுக்கு இந்த வெய்யிலிலும் கருப்பு ஸ்கிரீன் போட்டு கூட்டிட்டு போய் அவங்களை அடிமையா நடத்துற வாஞ்சூர் மாமா! உன் மதத்தை பாரு! நாங்க பார்ப்பனரை கவனிச்சிக்கிறோம்! உன் மதத்தில உள்ள சட்டதிட்டத்துனால கண்ணீர் விடற பெண்களைப் பாரு முதல்ல. பார்ப்பனரு எங்களுக்கு எப்போதும் எதிரிதான். வைக்கிற இடத்துலதான் வச்சிருக்கோம் மாமா!

Anonymous said...

எப்பல்லாம் வடிவேலு காமெடி பார்க்க முடியலயோ அப்பல்லாம் நான் இந்த வெப் சைட்டுக்கு வந்திடுவேன்!
தமிழகத்தை அழிக்க போண்டா,பஜ்ஜி,வட ,இந்தியர்கள் சதி!அதனால தமிழ் நாட்டை பிரிக்கணும்.english மாறன் ரெடியா வரைபடம் தயாரிச்சி வச்சிருக்காரு. அவரால அதுதான் முடிஞ்சது.

அதுக்கப்புறம் அதையும் இரண்டா பிரிச்சி இலங்கை தமிழருக்கு ஒண்ணு கொடுக்கணும்.அவங்க ரொம்ப ஒற்றுமையா இருப்பாங்க!. இதுக்கு முன்னாடி அப்பிடித்தான் இருந்தாங்க தெரியுமா?

Urgent delivery: உடனே இந்திய தலைகள் எல்லாருக்கும் ஒரு பார்சல் பாம் அனுப்புங்க!தனித்தமிழ் நாடு தயார்!

PUTHIYATHENRAL said...

மக்கள் பிரச்சனைகளை பற்றி நடப்பதை எழுதினால் உங்களுக்கு கசப்பா இருக்கு என்ன செய்வது. உங்களை போன்ற மகான்களுக்கு, புத்திசாலிகளுக்கு எழுதப்பட்டது இல்லை. எங்களை போன்ற பாமர மக்களுக்கு ஏற்ப்படும் பாதிப்புகளை கண்டு அதனால் இயல்பாக உண்டான ரௌத்திரத்தின் அடிப்படையில் எழுதப்படுவதே நமது பதிவுகள்.

உங்களுக்கு அதில் உடன்பாடும் இருக்கலாம் இல்லை வெறுப்பும் இருக்கலாம். இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சந்திக்கும் பாதிப்புகளை வெளியே கொண்டுவருவதே எங்களது நோக்கம்.

அமைதிப்படை ஈழத்து பெண்களை கற்பழித்தால் அது சரி, வல்லரசு என்கிற குடி போதையில் அடுத்த நாட்டு விசயத்தில் தலையிட்டு படைகொடுத்து, ராணுவ தளவாடங்கள் கொடுத்து எங்கள் இனத்தை அழித்தால் அது சரி நாங்கள் ஒன்றும் பேசக்கூடாது.

எங்களிடம் வரி வாங்கி கப்பலும், கடல்படையும் அமைத்து கொண்டு எங்கள் மீனவர்களை பாதுகாக்காமல் இலங்கை அரசுக்கு கூலி வேலை செய்தால் அது சரி. சொந்த நாட்டு மக்களை கொல்ல ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதுவும் சரி.

மலைவாழ் மக்களின் நிலங்களை பறித்து அந்நிய கம்பனிகளுக்கு கொடுப்பதும் சரி, மக்கள் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தையும், காவல்துறையையும் நாய்கள் போல் ஏவி விட்டு மக்களை கொன்றுகுவிப்பதும் சரி, மீண்டும் இந்தியாவை மேற்குலக கம்பனிகளின் பிடியில் கொண்டு சேர்ப்பதும் சரி.

நீங்கள் எது செய்தாலும் ஒன்றுமே கேட்க்க கூடாது. நான் இந்தியான் தேசபக்தி என்று சொல்லி எங்கள் வாயை அடைப்பீர்கள். உங்கள் வீட்டில் உள்ளயாரையும் ஆர்மிகாரன் கெடுக்கவில்லையே, உங்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் குண்டு போட்டு உங்கள் குழந்தைகள் சாகவில்லையே அதனால் உங்களுக்கு அதை பற்றி அக்கறை இல்லை.

சோவும், சுப்பிமணிய சுவாமியும், ராமகோபாலன், அத்வானி, தினமலர், தினமணி, இந்தியா டுடே, இப்படி இவர்கள் சொல்வது மட்டும் நிஜம். அவர்கள்தான் இந்த நாட்டில் எல்லாம் அவர்கள் சொல்லும் வர்ணாசிரமத்தை கேட்டு நாங்கள் வாயடைத்து நிற்க வேண்டும். எதிர்த்து எழுதினா வடிவேலு ஜோக்கு. உங்களை போன்றோர்களுக்கு எழுதப்பட்டதில்லை அண்ணா இது.

உங்களுக்கு மக்கள் பாதிப்பு எல்லாம் வடிவேலு ஜோக்குதான். நீங்கள் மஞ்சள் பத்திரிகை வாசிக்க வேண்டும் என்றால், வடிவேலு ஜோக்கும், நடிகைகளை பார்க்க வேண்டும் என்றால் தினமணி, தினமலருக்கு போங்கள். இங்கே நீங்கள் தேடும் எதுவும் உங்களுக்கு கிடைக்காது.

இதனை பற்றிய வலியும் வேதனையும் புரிந்திருக்க நியாமில்லை. ஈழத்து விடுதலை போரை நசுக்கியதர்க்கு உங்களால் பதில் சொல்ல முடியாது அதற்க்கு உண்டான விலை நிச்சயம் கொடுத்தே தீர வேண்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

Anonymous said...

Very nice article ..... Thank u

Anonymous said...

அதெப்படி வி.புலிகள் முஸ்லிம்களுக்கு செஞ்ச கொடுமையை 'அது பழசு'என்று தாண்டிப் போக முடிகிறது. நியாயம் உள்ளவனா உள்ளவளா இருந்தா அந்த கொடுமையைப் பத்தியும் ஒரு பதிவு போடணும் இல்லியா? மத்ததெல்லாம் ஞாபகம் இருக்கும்.இது மட்டும் மறந்துரும்!!!!

Anonymous said...

We need to get Tamil Eelam and thamil nadu

Anand said...
This comment has been removed by the author.
Anand said...

//அதெப்படி வி.புலிகள் முஸ்லிம்களுக்கு செஞ்ச கொடுமையை

முதலில் உங்கள் பெயரை குறிப்பிடவும். பிறகு ஏன் அப்படி நடந்தது என்று விளக்கவும்.

Anonymous said...

உங்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் குண்டு போட்டு உங்கள் குழந்தைகள் சாகவில்லையே அதனால் உங்களுக்கு அதை பற்றி அக்கறை இல்லை.// இந்த குண்டு வேற...பள்ளிவாசல்ல வச்சி அப்பாவிகளை சிதறடிச்ச குண்டு வேற போலிருக்கு...

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

தமிழ் மாறன் said...

நம்ம மக்களுக்கு என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்...

Anonymous said...

கர்நாடாவில் இருக்கும் கைகா அனுமின் நிலையம் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வருகிறது. விவரம் புரியாம உன் தமிழனாக நடிக்கும் முஸ்லிம் புத்தியை கைவிடு.

Anonymous said...

கர்நாடாவில் அனுமின் மின்சார நிலையேமே இல்லை என முழு பொய்.

இப்படி எல்லாம் எழுதி இந்த பொழைப்புக்கு .

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Kaiga_Nuclear_Power_Plant

லூசு படிச்சு பாருடா